ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் | 24 மணி நேரத்தில் 'ஜெயிலர்' சாதனையை முறியடித்த 'கூலி' டிரைலர் | 'கூலி' : அமெரிக்க பிரிமீயர் முன்பதிவில் 1 மில்லியன் வசூல் | தெலுங்குத் திரையுலகத்தில் இன்று முதல் ஸ்டிரைக் | 'ஏஐ' மூலம் மாற்றப்பட்ட கிளைமாக்ஸ்: தனுஷ் எதிர்ப்பு | ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! |
புதுடில்லி : பனாமா பேப்பர்ஸ் ஊழல் வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும் படி அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பிய நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராய் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
உலக அழகியும், பிரபல நடிகையுமான ஐஸ்வர்யா ராய் இந்திய சினிமாவில் முக்கிய நடிகையாக வலம் வருகிறார். தற்போது மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2016ம் ஆண்டில் ‛பனாமா பேப்பர்ஸ்' என்ற தலைப்பில் இந்நிறுவனத்தின் ரகசிய ஆவணங்கள் வெளியாகின. இதில் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அரசியல் பிரபலங்கள், திரைப்பிரபலங்கள் வெளிநாடுகளில் சட்டவிரோதமாக சொத்துகளை வாங்கி குவித்தது தெரியவந்தது. இந்த விவகாரத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய், நடிகர் அமிதாப் பச்சன் ஆகியோரும் வரி ஏய்ப்பு செய்ததாக தகவல் வெளியானது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட நபர்களுக்கு அமலாக்கத்துறை சார்பில் விளக்க அளிக்க சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது.
இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே 2 முறை ஐஸ்வர்யா ராய்க்கு சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. ஆனால் 2 முறையும் அவர் தனக்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார். இதனால் இன்று அவர் ஆஜர் ஆவாரா என்கிற கேள்வி எழுந்தது. இந்நிலையில் டில்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி தன் தரப்பு விளக்கத்தை ஐஸ்வர்யா ராய் அளித்துள்ளார்.
பனாமா பேப்பர்ஸ் முறைகேடு வழக்கில் கிட்டத்தட்ட 300 இந்தியர்களின் பெயர்கள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.