தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
1983ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வென்றதை மையமாக வைத்து 83 என்ற படம் தயாராகி இன்று (டிச 24) வெளியாகி உள்ளது. ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஆங்கிலம் மொழிகளில் வெளியாகி உள்ளது.
இதில் கேப்டன் கபில்தேவ்வாக ரன்வீர் சிங் நடித்துள்ளார், ஸ்ரீகாந்தாக ஜீவா நடித்துள்ளார். கபில்தேவ் மனைவியாக தீபிகா படுகோனே நடித்துள்ளார். இந்த படத்தில் உலக கோப்பை கிரிக்கெட் வீரர்களின் தனிப்பட்ட வாழ்க்கையும் காட்டப்பட்டு இருப்பதால் அவர்களுக்கு உரிமத் தொகையாக படத் தயாரிப்பு தரப்பில் இருந்து 15 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதை அவர்கள் எதிர்பார்க்காவிட்டாலும், படத் தயாரிப்பு இந்த பரிசை அவர்களுக்கு வழங்கி கவுரவித்தது. இதில் கேப்டன் கபில்தேவுக்கு மட்டும் 5 கோடி வழங்கப்பட்டுள்ளது.
இந்தியா 83ல் உலக கோப்பையை வென்றபோது வீரர்களுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் வழங்கிய சம்பளம் 2100 ரூபாய் தான். மொத்த அணிக்கும் சேர்த்து 10 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டது. ஆனால் 83 படத்தின் மூலம் அவர்களுக்கு 15 கோடி கிடைத்துள்ளது. ஒரு வெற்றி காலம் கடந்தும் அதற்கான பலனை கொடுத்துக் கொண்டிருக்கும் என்று படத்தில் ஒரு வசனம் வரும். அது இப்போது உண்மையாகி உள்ளது.