பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

பிரபல பாலிவுட் நடிகர் ராஜ்பால் யாதவ், ‛அர்த்' என்ற படத்தில் திருநங்கையாக நடித்திருக்கிறார். இந்த படத்தை பலாஷ் முச்சல் இயக்கியுள்ளார். ராஜ்பால் உடன் ரூபினா திலக், ஹிட்டன் தேஜ்வானி உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படம் ஓடிடி தளத்தில் வருகிற 10ம் தேதி வெளியாகிறது.
திருநங்கையாக நடித்திருப்பது குறித்து ராஜ்பால் கூறியதாவது: மும்பையில் வாழும் ஒரு திருநங்கையின் வாழ்க்கைதான் படம். ஒரு பாலின மாற்றம் ஒரு மனிதனை எப்படி புரட்டிப்போடுகிறது என்பது கதை. இந்த படத்தில் நிஜமான திருநங்கையை நடிக்க வைத்திருக்கலாமே... நீங்கள் ஏன் நடித்தீர்கள் என்று கேட்கிறார்கள். ஒரு விவசாயின் வாழ்க்கையை மையமாக வைத்து ஒரு படம் எடுக்கப்பட்டால், உண்மையான விவசாயி படத்தில் நடிக்க மாட்டார். அதேபோல், 'அர்த்' படத்தில் நான் திருநங்கையாக நடிக்கிறேன், அதே நேரத்தில் ஒரு தந்தையாகவும், கணவனாகவும் நடித்திருக்கிறேன். ஒரு திரைப்படம் முக்கியமாக பொழுதுபோக்கிற்காக உருவாக்கப்படுகிறது, ஆனால் ஒரு நடிகரால் மட்டுமே ஒரு கதாபாத்திரத்தின் பல அடுக்குகளுக்கு நியாயம் செய்ய முடியும் என்று நான் உணர்கிறே என்கிறார் ராஜ்பால்.




