சினிமாவில் நடிக்க வைப்பதாகக் கூறி சிறுமிக்கு வன்கொடுமை; மலையாள நடிகை கைது! | 'கைதி 2'க்கு முன்பாக ஹீரோவாக நடிக்கப் போகும் லோகேஷ் கனகராஜ் | ‛பாகுபலி தி எபிக்' ஐமேக்ஸ் வடிவிலும் வெளியாகிறது : படக்குழு அறிவிப்பு | ‛கூலி': 3 மில்லியனை நெருங்கும் பிரிமியர் வசூல் | ரசிகர்களுடன் ‛கூலி' படம் பார்த்த திரைப்பிரபலங்கள் | ‛குட் டே' முதல் ‛ஜேஎஸ்கே' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? | புரமோஷன் மேடையில் கண்கலங்கிய அனுபமா பரமேஸ்வரன் | மகேஷ்பாபு உறவு நடிகையின் கார் மீது பஸ் மோதல் : அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினார் | பிளாஷ்பேக் : நிஜமான தூக்குக் கயிற்றை மோகன்லால் கழுத்தில் மாட்டிய இயக்குனர் | இப்ப மிருணாள் தாக்கூர் தான் ஹாட் |
பிரபல பாலிவுட் நடிகர் ராஜ்பால் யாதவ், ‛அர்த்' என்ற படத்தில் திருநங்கையாக நடித்திருக்கிறார். இந்த படத்தை பலாஷ் முச்சல் இயக்கியுள்ளார். ராஜ்பால் உடன் ரூபினா திலக், ஹிட்டன் தேஜ்வானி உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படம் ஓடிடி தளத்தில் வருகிற 10ம் தேதி வெளியாகிறது.
திருநங்கையாக நடித்திருப்பது குறித்து ராஜ்பால் கூறியதாவது: மும்பையில் வாழும் ஒரு திருநங்கையின் வாழ்க்கைதான் படம். ஒரு பாலின மாற்றம் ஒரு மனிதனை எப்படி புரட்டிப்போடுகிறது என்பது கதை. இந்த படத்தில் நிஜமான திருநங்கையை நடிக்க வைத்திருக்கலாமே... நீங்கள் ஏன் நடித்தீர்கள் என்று கேட்கிறார்கள். ஒரு விவசாயின் வாழ்க்கையை மையமாக வைத்து ஒரு படம் எடுக்கப்பட்டால், உண்மையான விவசாயி படத்தில் நடிக்க மாட்டார். அதேபோல், 'அர்த்' படத்தில் நான் திருநங்கையாக நடிக்கிறேன், அதே நேரத்தில் ஒரு தந்தையாகவும், கணவனாகவும் நடித்திருக்கிறேன். ஒரு திரைப்படம் முக்கியமாக பொழுதுபோக்கிற்காக உருவாக்கப்படுகிறது, ஆனால் ஒரு நடிகரால் மட்டுமே ஒரு கதாபாத்திரத்தின் பல அடுக்குகளுக்கு நியாயம் செய்ய முடியும் என்று நான் உணர்கிறே என்கிறார் ராஜ்பால்.