பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

'எம்எஸ் தோனி' படத்தில் நடித்து பிரபலமான பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத் இரண்டு வருடங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கு பாலிவுட்டில் இருக்கும் வாரிசு அரசியல் என்று சொல்லப்படும் 'நொப்போட்டிசம்' தான் காரணம் என பாலிவுட் சினிமா ரசிகர்கள் இன்று வரை குற்றம் சாட்டி வருகின்றனர்.
அதனால், வாரிசு நடிகர்கள், நடிகைகள் நடித்து கடந்த இரண்டு வருடங்களாக வெளிவரும் படங்களைப் பற்றி கடுமையாக எதிர்த்தும், விமர்சித்தும் வருகிறார்கள். 'பாய்காட் பாலிவுட்' என்ற பொதுவான டிரெண்டிங் இருந்தாலும் அவ்வப்போது படங்களின் வெளியீட்டிற்கேற்ப அந்த டிரெண்டிங் மாறும்.
வரும் செப்டம்பர் மாதம் 9ம் தேதி வாரிசு நட்சத்திரங்களான ரன்பீர் கபூர், ஆலியா பட் நடித்து வெளிவர உள்ள 'பிரம்மாஸ்திரா' படத்திற்கு எதிராக ஏற்கெனவே 'பாய்காட்' டிரெண்டிங் அடுத்தடுத்து நடந்து வருகிறது. இந்நிலையில் அடுத்த வாரிசு நடிகர்களின் வெளியீடான 'விக்ரம் வேதா' படத்திற்கான 'பாய்காட்' டிரெண்டிங்கையும் இப்போதே ஆரம்பித்துவிட்டார்கள்.
தமிழில் விஜய் சேதுபதி, மாதவன் நடித்து வெளிவந்த 'விக்ரம் வேதா' படம் ஹிந்தியில் வாரிசு நடிகர்களான ஹிருத்திக் ரோஷன், சைப் அலிகான் நடிப்பில் உருவாகியுள்ளது. தமிழில் படத்தை இயக்கிய புஷ்கர் காயத்ரி ஹிந்தியிலும் இயக்கியுள்ளார்கள். இப்படத்தின் டீசர் பத்து நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்த மாதம் செப்., 8ம் தேதி டிரைலர் வெளியாகிறது. செப்டம்பர் 30ம் தேதி படம் வெளியாக உள்ளது.
'பாய்காட்' டிரெண்டுகளை 'பிரம்மாஸ்திரா, விக்ரம் வேதா' படங்கள் எப்படி சமாளிக்கப் போகிறது என பாலிவுட் மட்டுமல்ல இந்தியத் திரையுலகமே காத்துக் கொண்டிருக்கிறது.




