இனி உறுப்பினர் அல்லாதவர்கள் நடிப்பது கஷ்டம்: சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் பரத் | மைக்கை வைத்துவிட்டு வெளியேறட்டுமா? : வார் 2 விழாவில் டென்ஷனான ஜூனியர் என்டிஆர் | தலைமைக்கு போட்டியிடும் பெண் தயாரிப்பாளரின் வேட்பு மனு குறித்து முன்னாள் பார்ட்னர் எதிர் கருத்து | சிறையில் இருக்கும் நடிகை ரன்யா ராவின் வளர்ப்பு தந்தைக்கு மீண்டும் வழங்கப்பட்ட டிஜிபி பதவி | பிளாஷ்பேக்: திரைக்கதை வசனம் எழுதிய ரஜினி; வெள்ளித்திரையில் மின்னத் தவறிய “வள்ளி” | அபினய்-க்கு உதவிய தனுஷ் | இந்தியாவில் முதல் நாளில் வசூலைக் குவித்த படங்கள் | துருவ் விக்ரம் படத்தில் மூன்று கதாநாயகிகள்? | 'தலைவன் தலைவி' வெற்றி, சம்பளத்தை உயர்த்தும் விஜய் சேதுபதி? | ‛பல்டி'யில் கபடி வீரராக களமிறங்கிய சாந்தனு: முன்னோட்ட வீடியோ வெளியீடு |
ஹிந்தியில் சீனிகம், பா, ஷமிதாப் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் இயக்குனர் பால்கி. தற்போது துல்கர் சல்மானை வைத்து ஹிந்தியில் 'சுப்' என்கிற படத்தை இயக்கி வருகிறார். பாலிவுட் நடிகர் சன்னி தியோல் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ரிவெஞ்ச் ஆர்டிஸ்ட் என்கிற டேக்லைனுடன் சைக்காலஜிக்கல் திரில்லர் ஆக இந்தப் படம் உருவாகி வருகிறது. இது துல்கர் சல்மான் ஹிந்தியில் நடிக்கும் அவரது மூன்றாவது படமாகும். இந்த படத்தின் படப்பிடிப்பு பெருமளவு முடிந்துவிட்ட நிலையில் இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்க துல்கர் சல்மானை ஏன் தேர்வு செய்தேன் என்பது குறித்து கூறியுள்ளார் பால்கி.
இதுபற்றி அவர் கூறும்போது, “இந்த நாட்டில் பாதிப்பேருக்கு தெரிந்த சிறந்த திறமையான நபராக, ஒரு சூப்பர்ஸ்டார் முகமாக இருக்க வேண்டும். அதேபோன்று இன்னும் நாட்டில் இருக்கும் பாதிப்பேருக்கு ஒரு புதிய கண்டுபிடிப்பாக தெரிய வேண்டும். அதே சமயம் தனது தாய் மொழியைப் போலவே ஹிந்தியில் நன்கு பேச தெரிந்தவராக இருக்க வேண்டும். கிட்டத்தட்ட ஹிந்தி சினிமாவுக்கு ஒரு புதுமுகம் ஆகவே இருக்க வேண்டும். இதற்கெல்லாம் துல்கர் சல்மான் தான் சரியாக பொருந்தி வந்தார். கொரோனா காலகட்டத்தில் அவரிடம் ஜூம் கால் வழியாகத்தான் பேசினேன். ஆனால் அவர் முழு கதையையும் கேட்கவே இல்லை. உடனே இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார்” என்று கூறியுள்ளார்.