முதல் தெலுங்கு படத்தில் தோல்வியை சந்தித்த அதிதி ஷங்கர் | பிளாஷ்பேக்: ஒரு இசைமேதை தவிர்த்த பாடல், இன்னொரு இசைமேதை பாடிச் சிறப்பித்திருந்ததைச் சொல்ல “ஒரு நாள் போதுமா?” | அவுட்டோர்களுக்கும் தலையணையுடன் பயணிக்கும் ஜான்வி கபூர் | 'கந்தன் மலையில் கதாநாயகி இல்லை' எச்.ராஜா கலகல | மகாராஜாவை தொடர்ந்து மீண்டும் 100 கோடியை எட்டிப் பிடிக்கும் விஜய் சேதுபதி | கூலி படத்தில் சிவகார்த்திகேயன் சிறப்பு வேடத்தில் நடித்துள்ளாரா? | 210 கோடியை அள்ளிய ஆன்மிகப்படம் | 'சன்னிதானம்(P.O)' : சேரன், மஞ்சுவாரியர் வெளியிட்ட யோகிபாபு பட போஸ்டர் | ஒரே இரவில் இரண்டு விருதுகள்: மாளவிகா மோகனன் மகிழ்ச்சி | ‛தி இன்டர்ன்' பட ரீமேக்கில் இருந்து விலகிய தீபிகா படுகோனே |
தமிழில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு மாதவன், விஜய்சேதுபதி நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் விக்ரம் வேதா. இந்த நிலையில் இந்த படம் இதே பெயரில் ஹிந்தியில் ஹிருத்திக் ரோஷன் மற்றும் சைப் அலிகான் நடிப்பில் உருவாகியுள்ளது. தமிழில் இயக்கிய இயக்குனர்கள் புஷ்கர் காயத்ரியே ஹிந்தியிலும் இயக்கி உள்ளனர் இன்று (செப்-3௦) இந்த படம் வெளியாகி உள்ளது.
கடந்த சில நாட்களாகவே இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் படக்குழுவினர் கலந்து கொண்டு வருகின்றனர். அப்படி மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் படத்தின் இயக்குனர்களில் ஒருவரான புஷ்கரிடம், பொன்னியின் செல்வன் படமும் இதே தேதியில் ரிலீஸ் ஆகிறது அதுபற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டனர். அதற்கு பொன்னியின் செல்வன் மிகப்பெரிய படம்.. அதை எங்களால் பீட் பண்ண முடியாது. நாங்கள் அனைவரும் சேர்ந்து பொன்னியின் செல்வன் படத்தை பார்க்கப் போகிறோம். எப்படியும் சனி ஞாயிறுகளில் எங்கள் படத்திற்கு கூட்டம் நிச்சயம் வரும் என்று கூறினார்.
அவர் நாங்கள் அனைவரும் பொன்னியின் செல்வன் படத்தை இணைந்து பார்ப்போம் என்று சொன்னபோது ஹிருத்திக் ரோஷனின் முகம் சட்டென மாறி புஷ்கரை திரும்பி டென்சனுடன் ஒரு பார்வை பார்த்தார்.. அதன்பிறகு ஹிருத்திக் ரோஷன் பேசும்போது, “நான் இன்னும் அந்த நாவலைப் படிக்கவில்லை.. ஜஸ்ட் இப்போதைக்கு எனக்கு தெரிந்தது விக்ரம் வேதா மட்டும்தான்” என்று விறைப்பாக பேசியதிலிருந்து புஷ்கரின் பேச்சை அவர் ரசிக்கவில்லை என்பதை நன்றாகவே உணர முடிந்தது.