பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

ஷாருக்கான், தீபிகா படுகோன் நடித்த பதான் வருகிற 25ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியான படத்தின் பாடலில் தீபிகா படுகோன் காவி உடை அணிந்து ஆபாசமாக ஆடியது பலமான எதிர்ப்பை கிளப்பியது. தணிக்கை குழுவும் ஆட்சேபத்திற்குரிய காட்சிகளை நீக்கி விட்டு படத்தை வெளியிடுமாறு கூறியிருக்கிறது. படம் வெளியாக உள்ள நிலையில் வட இந்தியாவில் படத்திற்கு எதிரான போராட்டங்கள் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், குஜராத்தின் ஆமதாபாத் நகரில் வஸ்திராப்பூர் பகுதியில் உள்ள ஒரு ஷாப்பிங் மாலில் பதான் பட விளம்பர நிகழ்ச்சி நடந்தது. அப்போது பஜ்ரங்தள் அமைப்பை சேர்ந்த தொண்டர்கள் உள்ளே புகுந்கு அங்கிருந்த பேணர்களை கிழித்து எரிந்தனர். விளம்பர ஆர்ச்சுகளை உடைத்து எரிந்தனர். இந்த சம்பவம் பாலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. படத்தை திரையிடும் தியேட்டர்கள் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று ஜாக்ரன் மஞ்ச் அமைப்பு குஜராத் தியேட்டர்களுக்கு கடிதம் எழுதி உள்ளதாக அதன் தலைவர் ஜெகதீஷ் காத்ரி தெரிவித்துள்ளார்.




