ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
பழம்பெரும் பாலிவுட் நடிகரும், இயக்குனரும், தயாரிப்பாளருமான ராஜ் கபூரின் பங்களாவை, 'காத்ரேஜ் ப்ராப்பர்ட்டீஸ்' நிறுவனம் கையகப்படுத்துகிறது. இங்கு 500 கோடி ரூபாய் மதிப்பிலான சொகுசு வீடுகள் கட்டும் திட்டத்தை செயல்படுத்த, அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
மும்பையில் உள்ள செம்பூரில் அமைந்துள்ள மறைந்த பழம்பெரும் நடிகர் ராஜ் கபூருக்கு சொந்தமான பங்களாவை, அவரது வாரிசுகளான கபூர் குடும்பத்தினரிடம் இருந்து வாங்கி உள்ளதாக காத்ரேஜ் ப்ராப்பர்ட்டீஸ் தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் பிரோஜ்ஷா காத்ரேஜ் கூறியதாவது: நிலத்தின் மொத்த அளவு கிட்டத்தட்ட ஒரு ஏக்கர். இந்த நிலத்தில் ஆடம்பர வீட்டுத் திட்டத்தை உருவாக்க முடிவு செய்துள்ளோம். இத்திட்டத்தின் மதிப்பு 500 கோடி ரூபாய்.
இவ்வாறு அவர் கூறினார்.