ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
தேசிய விருது பெற்ற 'மணிகர்னிகா' படத்திற்கு பிறகு கங்கனா ரணவத்தின் படங்கள் எதுவும் பெரிதாக பேசப்படவில்லை. வசூலையும் தரவில்லை. அதிலும் அவர் நடித்து வெளியான கடைசி மூன்று படங்களான டாக்கெட், தலைவி, சந்திரமுகி 2, தற்போது வெளியாகி உள்ள தேஜஸ் படங்கள் போதிய வரவேற்பையும், வசூலையும் பெறவில்லை. குறிப்பாக 'தேஜஸ்' படம் பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது. போதிய கூட்டம் இன்றி பல தியேட்டர்களில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.
படம் வெளியான 4 நாட்களில் வெறும் 5 கோடி மட்டுமே வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. 60 கோடியில் தயாராகி உள்ள இந்த படம் அந்த பட்ஜெட்டை மீட்காது என்று சினிமா பார்வையாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். இந்த நிலையில் கங்கனா தனது சமூக வலைத்தள பக்கத்தில் உருக்கமாக பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் “கொரோனாவுக்கு முன்பே திரையரங்குகளுக்கு ரசிகர்கள் வருவது குறைந்தது. அதற்குப் பின் நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. இலவச டிக்கெட்டுகள் உட்பட நியாயமான சலுகைகள் வழங்கப்பட்டும் பல திரையரங்குகள் மூடப்பட்டு விட்டன. அந்தச் சரிவு தொடர்கிறது. அதனால், திரையரங்குகளுக்குச் சென்று படங்களைக் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் பார்த்து மகிழுங்கள். இல்லை என்றால் நாங்கள் வாழ முடியாது” என்று கூறினார்.