விஜய் மில்டன் இயக்கத்தில் இரண்டாம் முறையாக இணைந்த அம்மு அபிராமி! | ‛சூர்யா 45' படத்தின் தலைப்பு இதுவா? | செப்டம்பரில் ‛வா வாத்தியார்' படத்தை வெளியிட திட்டம்! | ஹீரோவாக நடிக்கும் படத்திற்காக தற்காப்பு கலை பயிற்சி பெறும் லோகேஷ் கனகராஜ்! | தெலுங்கானா மாநில சினிமா விருதுகள்: நேரில் விருது பெற்ற அல்லு அர்ஜுன் | அப்பாவை அப்படி பார்த்தது மகிழ்ச்சி: கீர்த்திபாண்டியன் நெகிழ்ச்சி | கவிஞர்.நா.முத்துக்குமார் இசைச்கச்சேரி: கமல்ஹாசன், சிவகார்த்திகேயன் பங்கேற்பு | மணிரத்னத்தை மறுத்தாரா ரஜினி? | விரைவில் இயக்குனராகும் பார்த்திபன் மகன் ராதாகிருஷ்ணன் | தயாராகிறார் அடுத்த கேப்டன் |
அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் தெலுங்குத் திரையுலகில் மிகவும் பிரபலமடைந்தவர் விஜய் தேவரகொண்டா. தமிழிலும் நோட்டா படத்தின் மூலம் அறிமுகமானார். தென்னிந்திய அளவில் பிரபலமாகி உள்ள அவர் அடுத்து ஹிந்தியிலும் பிரபலமாகப் போகிறார்.
தெலுங்கின் முன்னணி இயக்குனரான பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிக்க உள்ள புதிய படமான லைகர் படத்தின் முதல் பார்வையை இன்று(ஜன., 18) வெளியிட்டுள்ளனர். இப்படத்தை தெலுங்கு, ஹிந்தியில் ஒரே நேரத்தில் படமாக்க உள்ளார்களாம். மேலும், படம் தமிழ், மலையாளம், , கன்னடம் ஆகிய மொழிகளிலும் வெளியாக உள்ளது என அறிவித்துள்ளார்கள்.
படத்தை பிரபல ஹிந்தி இயக்குனரான கரண் ஜோஹரின் தர்மா புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இப்படத்தின் அறிவிப்பு பற்றி விஜய் தேவரகொன்டா டுவிட்டரில், “எங்களது இந்திய வருகையை அறிவிக்கிறோம். என்னைப் போன்ற பின்னணி உள்ள ஒருவர், இங்குள்ள சில விதிமுறைகளின்படி எந்த விதத்திலும் சென்றிருக்க வாய்ப்பில்லை. ஆனால், வெறித்தனமான பைத்தியம், ஆர்வம், கடின உழைப்பு ஆகியவற்றால் இங்கே இருக்கிறோம். என்னைப் போல் உள்ளவர்கள், பெரிதாக கனவு காணுங்கள், நம்பிக்கை வையுங்கள் அது நிச்சயம் நடக்கும்,” என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.