திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
பாலிவுட் நடிகை அமிஷா படேல் மும்பையை சேர்ந்தவர். தமிழில் விஜய் நடித்த புதிய கீதை படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தாரே, அதே அமிஷா படேல் தான். சில தினங்களுக்கு முன் அகமதாபாத்தில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்துகொண்ட இவருக்கு 'குஜராத்தின் உண்மையான கவுரவம்' என சான்றிதழ் வழங்கி கவுரவித்துள்ளனர்.
இவருக்கு வழங்கப்பட இந்த சான்றிதழை ரசிகர்கள் பலர் பார்க்க விரும்பியதால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் அமிஷா படேல். அதேசமயம் தயாரிப்பாளர் அஜய் குமார் என்பவரிடம் 2.5 கோடி வாங்கிய அமிஷா படேல் அதை திருப்பி தரவில்லை என அவர் மீது தயாரிப்பாளர் வழக்கு தொடர்ந்துள்ளார் என்பதும், அதற்கு பிப்ரவரி மாதமே பதிலளிக்கும்படி ஜார்கண்ட் நீதிமன்றம் உத்தரவிட்டதும் தனிக்கதை. ஆனால் இந்த புகாரில் ஆதாரமில்லை என கூறியுள்ளார் அமிஷா படேல்.