அமெரிக்க முன்பதிவு : 'வார் 2'ஐ பின்னுக்குத் தள்ளி முந்தும் 'கூலி' | கமல் தயாரிப்பில் அண்ணன், தம்பி நடிப்பார்களா? | ரசிகர்களுடன் போட்டோ, விருந்து : தனுஷ் மாறியது ஏன் | மாளவிகா மோகனனின் பிறந்தநாளுக்கு போஸ்டர் வெளியிட்டு அசத்திய மும்மொழி பட குழுவினர் | 50 வருடம் ஒருவர் சூப்பர் ஸ்டாராவே இருக்கிறாரே அதுதான் பெரிய விஷயம் ; கூலி விழாவில் சத்யராஜ் புகழாரம் | கவர்ச்சியாக நடித்தவர் கடவுளாக நடிக்கலமா? : துர்க்கை ஆக நடித்த கஸ்துாரி பதில் | மலையாளம் பிக்பாஸ் 7ல் பங்கேற்ற ஹிந்தி பிக்பாஸ் 9 போட்டியாளர் | லோகேஷ் கனகராஜின் புரமோஷன் பேட்டிகள் ; ஜாலியாக கிண்டலடித்த ரஜினிகாந்த் | மகேஷ்பாபுவை அடுத்து மல்டிபிளக்ஸ் தியேட்டர் திறந்த ரவி தேஜா | தனி நபர்களை வைத்து படப்பிடிப்பு : தெலுங்கு திரைப்பட வர்த்தக சபை அறிக்கை |
ஆடுகளம்' படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை டாப்சி. அதன்பிறகு ஆரம்பம், காஞ்சனா 2, கேம் ஓவர் உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்துள்ளார். தமிழில் வாய்ப்புகள் இல்லாததால் பாலிவுட் பக்கம் சென்றார். தற்போது தெலுங்கு மற்றும் ஹிந்தியில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். ஹிந்தியில் பிங்க், பத்லா, நாம் சபானா, மிஷன் மங்கள், தப்பட் போன்ற படங்களில் நடித்து பிசியாகிவிட்டார். டாப்சியின் நடிப்பு ஹிந்தி ரசிகர்களிடையே நல்ல அங்கீகாரத்தை பெற்று தந்துள்ளது. இதையடுத்து அனுராக் காஷ்யப்பின் இயக்கத்தில் 'டூ-பாரா', 'லூப் லாபெட்டா', மற்றும் 'சபாஷ் மித்து' உள்ளிட்ட படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் டாப்சி கூறியிருப்பதாதாவது, 'நான் ஒரு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டு தேதிகள் கொடுத்தேன். தேதிகள் கொடுத்தேனே தவிர படத்திற்காக தயாராகவில்லை. இந்நிலையில் என்னை அந்த படத்தில் இருந்து நீக்கிவிட்டார்கள். என்னை நீக்கியதை படக்குழுவினர் என்னிடம் கூறவில்லை. நான் மீடியாக்கள் மூலம் தான் தெரிந்து கொண்டேன். படத்தில் இருந்து நீக்கியது குறித்து மீடியாக்கள் என்னிடம் கேட்டன. அதை பார்த்து படக்குழுவை சேர்ந்தவர்கள் எனக்கு போன் செய்தார்கள், சந்தித்து பேசினார்கள். நான் மீடியாவிடம் பேசிய பிறகே அவர்கள் என்னிடம் மன்னிப்பு கேட்டார்கள். ஆனால் என்னை படத்தில் இருந்து நீக்கியதற்கான காரணத்தை சொல்லவில்லை'.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.