ஜனநாயகன் பட வழக்கில் ஜன., 27ல் தீர்ப்பு | அஜித் 64ல் நிறைய சர்ப்ரைஸ் இருக்கு : ஆதிக் ரவிச்சந்திரன் | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்கும் பிரீத்தி முகுந்தன் | மணிகண்டன் படத்தை இயக்கும் தேசிங்கு பெரியசாமி | விஜய்க்கு தம்பியாக தனுஷ் : இயக்குனர் ஏ.வெங்கடேஷ் சொன்ன தகவல் | கவின் படத்தில் இணைந்த சிம்ரன் | கேரள தேர்தலில் போட்டியிடுகிறேனா : பாவனா பதில் | 32 வருடங்களுக்குப் பிறகு 4வது முறையாக அடூர் கோபாலகிருஷ்ணன் உடன் இணையும் மம்முட்டி | மலையாளத்தில் காளிதாஸ் ஜெயராமின் புதிய படப்பிடிப்பு துவங்கியது | 84 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழக்கு : தனுஷ் பட இயக்குனர் விளக்கம் |

மோகன்லால் நடிப்பில் பிரியதர்ஷன் இயக்கத்தில் மிக பிரமாண்டமான வரலாற்று படமாக உருவாகியுள்ள ‛மரைக்கார்; அரபிக்கடலிண்டே சிம்ஹம்' படம் ஓடிடியில் தான் ரிலீஸாக போகிறது என்பது உறுதியாகி விட்டது. அப்படி தியேட்டர்களில் மரைக்கார் படத்தை வெளியிடுவதாக இருந்தால், அதன் தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர் கேட்ட தியேட்டர்கள் எண்ணிக்கையும் எதிர்பார்த்த முன்பணமும் தர முடியாது என தியேட்டர் உரிமையாளர்கள் கூறிவிட்டனர்.
இதனால் தற்போது மரைக்கார் படத்தை ஓடிடியில் வெளியிடுவது என்றே உறுதியாக முடிவெடுத்து விட்டார் ஆண்டனி பெரும்பாவூர். அதுமட்டுமல்ல, இவரது தயாரிப்பில் மோகன்லால் நடித்துள்ள மற்ற நான்கு படங்களான ப்ரோ டாடி, அலோன், ட்வல்த் மேன் மற்றும் புலிமுருகன் இயக்குனர் டைரக்சனில் மோகன்லால் நடிக்க உள்ள புதிய படம் என அனைத்தையுமே ஓடிடியில் வெளியிடும் முடிவையும் அவர் எடுத்துவிட்டாராம்.
மரைக்கார் படம் சுமார் 83 கோடி செலவில் எடுக்கப்பட்டுள்ளதால் அது எந்த சேதாரமும் இல்லாமல் திரும்பி வரவேண்டும் என்பதற்காகவே ஓடிடி முடிவை எடுத்தார் தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர். ஆனால் தியேட்டர் உரிமையாளர்கள் இந்த விஷயத்தில் நடந்த பேச்சு வார்த்தையின்போது தனது மனதை காயப்படுத்தி விட்டதால் தான், தனது மற்ற படங்களையும் ஓடிடியில் வெளியிடும் முடிவுக்கு வந்துவிட்டாராம்.
அதேசமயம் பி.உன்னிகிருஷ்ணன் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள ஆராட்டு படத்திற்கு தயாரிப்பாளர் வேறு ஒருவர் என்பதால் அந்தப்படம் மட்டும் தியேட்டர்களில் தான் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.




