நம்ப முடியவில்லை : ‛கீதா கோவிந்தம்' குறித்து ராஷ்மிகா மகிழ்ச்சி பதிவு | 78 கோடியில் சொகுசு பங்களா வாங்கிய தனுஷ் பட நடிகை | அஜித் 64வது படம் எந்த மாதிரி கதை : ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட தகவல் | கூலி படத்தில் அமீர்கானை வீணடித்து விட்டார்கள் : ரசிகர்கள் ஆதங்கம் | ஆகஸ்ட் 22-ல் ஓடிடியில் வெளியாகும் தலைவன் தலைவி | லிவ்-இன் உறவுகள் பெண்களுக்கு தீங்கு விளைவிக்கும் : கங்கனா | அப்படி நடித்ததால் ரசிகர்கள் வெறுத்தனர் : அனுபமா பரமேஸ்வரன் | சினிமாவில் 50... வாழ்த்திய பிரதமர் மோடி : நன்றி தெரிவித்த ரஜினி | கூலி படத்தில் மிரட்டிய சவுபின் ஷாகிர், ரச்சிதா ராம் : இவங்க பின்னணி தெரியுமா? | சில கோடி செலவில் ‛கேப்டன் பிரபாகரன்' ரீ ரிலீஸ் : கில்லி மாதிரி வெற்றியை கொடுக்கமா? |
மலையாளத்தில் வெளியான அங்கமாலி டைரீஸ், ஈ மா யூ, ஜல்லிக்கட்டு என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கியவர் லிஜோ ஜோஸ் பள்ளிசேரி. மலையாள ரசிகர்கள் மட்டுமல்லாது கோலிவுட், பாலிவுட் என மொழி தாண்டிய படைப்பாளிகளையும் கவர்ந்தவர். தற்போது முதன்முறையாக மம்முட்டியை வைத்து நண்பகல் நேரத்து மயக்கம் என்கிற படத்தை இயக்கி முடித்துவிட்டார். கதை பிடித்துப்போனதால் இந்தப்படத்தை மம்முட்டியே தயாரிக்கவும் செய்துள்ளார்.
தற்போது இன்னொரு ஆச்சர்யமாக இந்தப்படம் வெளிவருவதற்குள்ளாகவே லிஜோ ஜோஸ் பள்ளிசேரியின் டைரக்சனில் அடுத்து ஒரு படத்திலும் நடிக்கிறார் மம்முட்டி. ஆனால் இது முழு நீள படமல்ல. பிரபல மலையாள எழுத்தாளரும் இயக்குனருமான எம்.டி.வாசுதேவன் நாயர் எழுதிய பத்து சிறுகதைகளை மையப்படுத்தி பத்து படங்களின் தொகுப்பாக ஆந்தாலாஜி படம் ஒன்று தயாராகிறது. அதில் ஒரு கதையாக இவர்களது படமும் உருவாகிறது.