இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
மலையாளத்தில் வெளியான அங்கமாலி டைரீஸ், ஈ மா யூ, ஜல்லிக்கட்டு என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கியவர் லிஜோ ஜோஸ் பள்ளிசேரி. மலையாள ரசிகர்கள் மட்டுமல்லாது கோலிவுட், பாலிவுட் என மொழி தாண்டிய படைப்பாளிகளையும் கவர்ந்தவர். தற்போது முதன்முறையாக மம்முட்டியை வைத்து நண்பகல் நேரத்து மயக்கம் என்கிற படத்தை இயக்கி முடித்துவிட்டார். கதை பிடித்துப்போனதால் இந்தப்படத்தை மம்முட்டியே தயாரிக்கவும் செய்துள்ளார்.
தற்போது இன்னொரு ஆச்சர்யமாக இந்தப்படம் வெளிவருவதற்குள்ளாகவே லிஜோ ஜோஸ் பள்ளிசேரியின் டைரக்சனில் அடுத்து ஒரு படத்திலும் நடிக்கிறார் மம்முட்டி. ஆனால் இது முழு நீள படமல்ல. பிரபல மலையாள எழுத்தாளரும் இயக்குனருமான எம்.டி.வாசுதேவன் நாயர் எழுதிய பத்து சிறுகதைகளை மையப்படுத்தி பத்து படங்களின் தொகுப்பாக ஆந்தாலாஜி படம் ஒன்று தயாராகிறது. அதில் ஒரு கதையாக இவர்களது படமும் உருவாகிறது.