ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
சத்யன் அந்திக்காடு இயக்கத்தில் மீரா ஜாஸ்மின் ரீ என்ட்ரி ஆகியுள்ள படம் மகள். இதில் அவருடன் ஜெயராம், தேவிகா சஞ்ய் உள்பட பலர் நடித்துள்ளனர். கடந்த ஏப்ரல் 29ம் தேதி வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாவும் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த படத்தில் அம்மா மகளின் உறவு மிக அற்புதமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. மகளாக நடித்துள்ள தேவிகா சஞ்சய் மிகவும் உற்சாகத்தில் இருக்கிறார். இது தொடர்பாக அவர் மீடியாக்களிடம் பேசும்போது ஆனந்த கண்ணீர் வடித்தார். அந்த வீடியோவும், படமும் வைரலாகி வருகிறது.
அவர் கூறியிருப்பதாவது: எனது இதயம் நிறைந்துள்ளது. படப்பிடிப்பின் கடைசி நாளில் நான் அழுதேன், இன்றுவரை அழுது கொண்டிருக்கிறேன். எனது கண்ணில் ஆனந்த கண்ணீர் வந்து கொண்டே இருக்கிறது. என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. எனது முதல் படமே வெற்றிப் படமாகவும், எனக்கு நல்ல பெயரை பெற்றுக் கொடுத்த படமாகவும் அமைந்தது இறைவன் கொடுத்து வரம்.
சத்யன் சார் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் என்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன், சீனிவாசன் சார், சித்திக் சார் உங்களின் அன்புக்கும் ஆதரவிற்கும் நன்றி, உங்களோடு திரையை பகிர்ந்ததில் மிக்க மகிழ்ச்சி . என்று கூறியுள்ளார் தேவிகா.