ரிலீஸாகாத ‛மஞ்சும்மேல் பாய்ஸ்' பட நடிகரின் பட காட்சிகள் ஆன்லைனில் லீக் ; உதவி இயக்குனர் மீது புகார் | நிவின்பாலி மீதான மோசடி வழக்கு விசாரணையை நிறுத்தி வைத்த நீதிமன்றம் | இந்தாண்டு பல பாடங்களை கற்றுத் தந்தது : ஹன்சிகா | வேட்பு மனு நிராகரிப்பு சரிதான் ; பெண் தயாரிப்பாளரின் கோரிக்கையை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | 2வது திருமண சர்ச்சைக்கு இடையில் முதல் மனைவியுடன் விழாவில் பங்கேற்ற மாதம்பட்டி ரங்கராஜ் | கிஸ் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் | முருகனாக நடித்த ஸ்ரீதேவி; 13 வயதில் ஹீரோயின் ஆனவர்: இன்று ஸ்ரீதேவியின் 62வது பிறந்தநாள் | தெரு நாய்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து விமர்சனத்தில் சிக்கிய ஜான்வி கபூர்! | சினிமாவில் 50... நம்ம சூப்பர் ஸ்டாரை நானும் பாராட்டுகிறேன் : கமல் | நாகார்ஜுனாவின் வில்லன் வேடத்திற்கான எதிர்பார்ப்பை எகிற வைத்த ரஜினி! |
கடந்த சில வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் நிவின்பாலி போலீஸ் அதிகாரியாக நடித்த ஆக்சன் ஹீரோ பைஜு என்கிற படம் வெளியானது. அப்ரிட் ஷைன் என்பவர் இயக்கிய இந்த படத்தை நிவின்பாலியே தயாரித்திருந்தார். வழக்கமான போலீஸ் படங்களில் இருந்து மாறுபட்டு ரொம்பவே எதார்த்தமான பாணியில் உருவாகியிருந்த இந்த படத்தின் மூலமாக, பல புதுப்புது நடிகர்கள் அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆகினர். சமீபத்தில் கூட இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக அறிவிப்பு வெளியானது.
அப்படி இந்த படத்தில் கிளைமாக்ஸில் நிவின்பாலியுடன் மோதும் முரட்டு வில்லனாக நடித்து இருந்தவர் என்.டி பிரசாத். இந்த படத்தின் மூலம் ஓரளவு பிரபலமான இவர் அதற்கடுத்து சில படங்களிலும் நடித்தார். இந்தநிலையில் இவர் தனது வீட்டின் அருகே உள்ள மரத்தில்தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவர் சினிமாவில் நடித்திருந்தாலும் நிஜத்தில் இவர் மீது காவல் நிலையத்தில் பல வழக்குகள் உள்ளன.. குறிப்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு போதைப் பொருட்களை பயன்படுத்தினார் என இவர் மீது வழக்கு பதியப்பட்டு இருந்தது. வழக்குகளின்ன் தீவிரம் மற்றும் மன அழுத்தம் காரணமாக இவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.