பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

பிரபல தெலுங்கு நடிகரான சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் தேஜா தெலுங்கு சினிமாவில் 2007ல் சிருதா என்ற படத்தில் அறிமுகமானவர். அதையடுத்து ராஜமவுலியின் மகதீராவில் நடித்தார். அந்த படம் சூப்பர் ஹிட் அடித்தது. பின்னர் ரங்கஸ்தலம், ஆர் ஆர் ஆர் என பல முக்கிய படங்களில் நடித்தவர் தற்போது ஷங்கர் இயக்கும் ஆர்சி 15 என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படம் அரசியல் த்ரில்லர் கதையில் உருவாகி வருகிறது. இந்த நிலையில் செப்டம்பர் 28ம் தேதியான நேற்றோடு திரை உலகில் ராம்சரண் நடிகராகி 15 ஆண்டுகளை நிறைவு செய்து இருக்கிறார். இதையடுத்து திரை உலகினரும், ரசிகர்களும் சோசியல் மீடியாவில் அவரை வாழ்த்தி வருகிறார்கள். சிரஞ்சீவியும் தனது மகன் ராம்சரணை வாழ்த்தி ஒரு செய்தி வெளியிட்டுள்ளார்.
அதில், ‛‛மகதீராவிலிருந்து ரங்கஸ்தலம், ஆர்ஆர்ஆர் இப்போது ஷங்கருடன் ஆர்சி- 15 வரை சரண் எப்படி நடிகராக உருவெடுத்தார் என்பது மனதிற்கு இதமாக இருக்கிறது. ராம்சரணின் ஆர்வம், உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் தான் எடுத்துக் கொண்ட பணியில் உற்சாகத்துடனும் உத்வேகத்துடனும் செயல்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. ராம்சரண் மேலும் பல உயரங்களையும் பெருமைகளையும் அடைய வேண்டும் என வாழ்த்துகிறேன்'' என்றார் சிரஞ்சீவி.