ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதனை கமல் தொகுத்து வழங்குகிறார். இதேபோன்று தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியை நாகார்ஜுனா தொகுத்து வழங்கி வருகிறார். அங்கு 6வது சீசனாக பிக்பாஸ் தமிழுக்கு முன்பே துவங்கி ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி சமூக சீர்கேட்டுக்கு காரணமாக இருக்கிறது. இளைஞர்களை தவறாக வழிநடத்துகிறது. இதனால் இந்த நிகழ்ச்சியை நிறுத்த வேண்டும் என்று ஐதராபாத் உயர்நீதி மன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் நாகார்ஜுனா, நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள், ஒளிபரப்பாளர்கள் மற்றும் மத்திய மாநில அரசுகள் விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. இது சின்னத்திரை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.