சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
மலையாள திரைகளில் மிக பிரபலமான கதாசிரியரும், இயக்குனருமான அடூர் கோபாலகிருஷ்ணன் பல நல்ல கதையம்சம் கொண்ட படங்களை கொடுத்திருக்கிறார். கேரளாவில் மதிப்பிற்குரிய மனிதராக கருதப்படும் இவர் கோட்டயம் மாவட்டத்தில் காஞ்சிரமட்டம் பகுதியில் உள்ள கே ஆர் நாராயணன் தேசிய காட்சி அறிவியல் மற்றும் கலை கல்லூரியில் சேர்மன் ஆகவும் பொறுப்பு வகித்து வந்தார்.
இந்த கல்லூரியில் டைரக்டராக பொறுப்பு வகித்த சங்கர் மோகன் என்பவர் மாணவர்களிடம் சாதி பாகுபாடு காட்டுகிறார் என்பது உள்ளிட்ட பல காரணங்களை கூறி அவரை மாற்றக்கோரி கிட்டத்தட்ட 48 நாட்கள் மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தினர். இதைத் தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பு சங்கர் மோகன் தனது பதவியை ராஜினாமா செய்து விலகினார்.
இந்த நிலையில் தற்போது தனது சேர்மன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்து ராஜினாமா செய்துள்ளார் அடூர் கோபாலகிருஷ்ணன். இது பற்றி அவர் கூறும்போது, சங்கர் மோகன் இந்த கல்லூரிக்காகத்தான் தனது உழைப்பை கொடுத்து வந்தார். ஆனால் அவருக்கு எதிராக இப்படி ஒரு போராட்டத்தை தூண்டி விட்டதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது குறித்து அரசு விசாரணை நடத்த வேண்டும். ஒரு நல்ல மனிதரை இந்த கல்லூரியை விட்டு தானாகவே வெளியேறும்படி ஒரு சூழலை உருவாக்கி விட்டார்கள். இதைத்தொடர்ந்து நானும் இந்த சேர்மன் பதவியில் இருந்து விலகுகிறேன். இது குறித்து சில நாட்களாகவே கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் பேசி வந்தேன். இப்போது திடமாக இந்த முடிவை எடுத்துள்ளேன்” என்று கூறியுள்ளார் அடூர் கோபாலகிருஷ்ணன்.