திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
கன்னடத்தில் கேஜிஎப் படத்தின் இரண்டு பாகங்களை எடுத்து மிகப்பெரிய வெற்றி படங்களாக மாற்றி முன்னணி இயக்குனர் வரிசைக்கு உயர்ந்தவர் இயக்குனர் பிரசாந்த் நீல். இதை தொடர்ந்து தற்போது சலார் படத்தை இயக்கி வருகிறார். அதையடுத்து ஜூனியர் என்டிஆரின் படத்தை இயக்க உள்ளார் என்கிற தகவலும் வெளியானது.
அதேசமயம் கன்னடத்தில் உருவாகி வரும் பகீரா என்கிற படத்திற்கு பிரசாந்த் நீல் கதை எழுதி உள்ளார். கன்னட நடிகர் ஸ்ரீ முரளி ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிகர் பஹத் பாசில் நடிக்கிறார் என்று ஆரம்பத்திலேயே சொல்லப்பட்டது. இடையில் நடிகர் ஸ்ரீ முரளி படப்பிடிப்பில் காயமடைந்து, தற்போது குணமடைந்து மீண்டும் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்து வருகிறார்.
அதே சமயம் இந்த படத்தில் பஹத் பாசில் நடிக்கிறாரா என்பது குறித்து இப்போது வரை இன்னும் உறுதியாக தெரியவில்லை. இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் ஏஜே ஷெட்டி என்பவர் கூறும்போது, “படம் ஆரம்பித்த சமயத்திலேயே பஹத் பாசில் நடிப்பதாகத்தான் அவருடன் பேச்சுவார்த்தை நடந்து வந்தது. அவரும் இதில் நடிக்க ஆர்வம் காட்டினார். ஆனால் இப்போது அவர் நடிக்கிறாரா இல்லையா என்பது பற்றி இன்னும் உறுதியாக தெரியவில்லை” என்று கூறியுள்ளார்.
அதே சமயம் கேஜிஎப், காந்தரா படங்களை தயாரித்த ஹோம்பலே நிறுவனம் தான் இந்த படத்தையும் தயாரித்து வருகிறது. கன்னட இயக்குனர் பவண்குமார் முதல் முறையாக மலையாளத்தில் பஹத் பாசிலை வைத்து இயக்கி வரும் தூமம் என்கிற படத்தையும் இதே நிறுவனம்தான் தயாரித்து வருகிறது. அந்த படத்தின் படப்பிடிப்பும் நிறைவடைந்து விட்டது. ஒரே நிறுவனம் தயாரிக்கும் படங்கள் என்பதால் இந்த பகீரா படத்திலும் பஹத் பாஸில் நடிப்பதற்கு வாய்ப்பு உண்டு என்றே இப்போது வரை சொல்லப்பட்டு வருகிறது.