பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

மலையாள சினிமாவின் பழம்பெரும் நடிகர் பூஜாபுரா ரவி. 800க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 83 வயதான அவர் முதுமை தந்த உடல்நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார். இடுக்கி மாவட்டம் மறையூரிலுள்ள தனது மகள் வீட்டில் வசித்து வந்த அவருக்கு , நேற்று காலை திடீரென்று மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனே அருகில் இருந்த ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் மரணம் அடைந்தார். பூஜப்புரா ரவி மரணத்துக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் மலையாள திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்த பூஜப்புரா ரவி 1976 முதல் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். கள்ளன் கப்பலில் தன்னேக, ரவுடி ராமு, ஓர்மகள் மரிக்குமோ, அம்மிணி அம்மாவன், முத்தாரம்குன்னு பிஓ, கிலுக்கம் உள்பட 800க்கும் மேற்பட்ட படங்களில் வில்லன், நகைச்சுவை, குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கிறார்.. கடைசியாக 2016ல் 'கப்பி' என்ற படத்தில் நடித்திருந்தார்.