பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

தெலுங்கு திரையுலகில் குறுகிய காலகட்டத்தில் இளம் முன்னணி நடிகராக வளர்ந்து விட்டவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. இவரது நடிப்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பு குஷி திரைப்படம் வெளியானது. சிவா நிர்வானா இயக்கியிருந்த இந்த படத்தில் சமந்தா கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றதுடன் மிகப்பெரிய அளவில் வசூலித்தும் வருகிறது.
இந்த நிலையில் இந்த வெற்றிக்காக கோயில் கோயிலாக சென்று தரிசனம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகிறார் விஜய் தேவரகொண்டா. அதுமட்டுமல்ல 100 குடும்பங்களுக்கு தன்னுடைய சொந்த செலவில் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் உதவி செய்யப் போவதாகவும் அறிவித்துள்ளார். இதற்கு சோசியல் மீடியாவில் ரசிகர்களிடம் வரவேற்பு கிடைத்து வருகிறது.
இது ஒரு பக்கம் இருக்க, இதற்கு முன்னால் வெளியான விஜய் தேவரகொண்டாவின் லைகர் மற்றும் வேர்ல்ட் பேமஸ் லவ்வர் ஆகிய படங்கள் படு தோல்வியை சந்தித்தன. இதில் வேர்ல்ட் பேமஸ் லவ்வர் படத்தை தயாரித்த அபிஷேக் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் விஜய் தேவரகொண்டாவிற்கு கிண்டலாக ஒரு கோரிக்கை வைத்துள்ளார்.
அதில், "அன்புள்ள விஜய் தேவரகொண்டா... உங்களை வைத்து படம் எடுத்து விநியோகம் செய்த வகையில் எட்டு கோடி ரூபாய் எங்களுக்கு நஷ்டமானது. அது பற்றி ஒருவருமே பொருட்படுத்தவில்லை. நீங்கள் தற்போது 100 குடும்பங்களுக்கு ஒரு கோடி ரூபாய் வழங்குவதாக அறிவித்துள்ளது உங்களது பெரிய மனதை காட்டுகிறது. தயவுசெய்து எங்களுக்கும் திரையரங்கு அதிபர்களுக்கும், விநியோகஸ்தர்களின் குடும்பங்களுக்கும் இதுபோல உதவி செய்து காப்பாற்றும்படி வேண்டிக் கொள்கிறோம்" என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.
இதையடுத்து தன்னை வைத்து படம் எடுத்து பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர்களுக்கு உதவிக்கரம் நீட்ட ஏன் விஜய் தேவரகொண்டாவிற்கு மனம் வரவில்லை என முன்னர் பாராட்டிய அதே நெட்டிசன்களில் பலர் தற்போது அவரை விமர்சித்து வருகின்றனர்.