தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
பாகுபலி படங்களின் வெற்றிக்கு பிறகு பான் இந்திய நடிகராக மாறிவிட்டார் பிரபாஸ். அதைத்தொடர்ந்து அவர் நடிக்கும் படங்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தாலும் இதற்கு முன்னதாக அவர் நடிப்பில் வெளியான ராதே ஷ்யாம் மற்றும் ஆதிபுருஷ் ஆகிய படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெற தவறின. தற்போது கேஜிஎப் இயக்குனர் பிரசாந்த் நீல் டைரக்ஷனில் சலார் என்கிற படத்தில் நடித்து முடித்து விட்டார் பிரபாஸ். இந்த படம் டிசம்பர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து கல்கி, ராஜா டீலக்ஸ், ஸ்பிரிட் என அடுத்தடுத்த படங்கள் அவரது கைவசம் உள்ளன.
அதே சமயம் இந்த படங்களில் படப்பிடிப்புகளை எல்லாம் ஒத்திவைத்துவிட்டு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஐரோப்பா கிளம்பி சென்றார் பிரபாஸ். நீண்ட நாட்களாகவே முழங்கால் வலியால் அவதிப்பட்டு வந்த பிரபாஸுக்கு அங்கே முழங்கால் அறுவை சிகிச்சை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து ஐரோப்பாவிலேயே தொடர்ந்து சில நாட்கள் ஓய்வெடுத்து விட்டு தற்போது ஹைதராபாத் திரும்பியுள்ளார் பிரபாஸ். விமான நிலையத்தில் இருந்து தனது முகத்திற்கு மாஸ்க் அணிந்தபடி தனி ஆளாக அவர் நடந்து செல்லும் வீடியோ ஒன்று தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.