‛கிச்சா' என்கிற பெயர் தன்னுடன் ஒட்டிக்கொண்டது எப்படி ? சுதீப் புதிய தகவல் | 'தீ' ரஜினியை ரி-க்ரியேட் செய்துள்ளாரா லோகேஷ்? | லகான் கிராம மக்களுடன் அமர்ந்து ‛சிதாரே ஜமீன் பர்' படத்தை பார்த்த அமீர்கான் | பிளாஷ்பேக்: காட்சியும், கானமும் “நான் பாடும் பாடல்” | உழைக்கும் கரங்கள், உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன், பீஸ்ட் - ஞாயிறு திரைப்படங்கள் | சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் |
மலையாள நடிகர் திலீப் தற்பொழுது ‛தங்கமணி' என்கிற படத்தில் நடித்து வருகிறார். பல விருதுகளைப் பெற்ற 'உடல்' என்கிற படத்தை இயக்கிய ரதீஷ் ரகுநந்தன் என்பவர் இந்த படத்தை இயக்கி வருகிறார். நடிகை பிரணிதா சுபாஷ் இந்த படத்தில் கதாநாயகியாக நடிப்பதன் மூலம் மலையாள திரையுலகில் அடியெடுத்து வைத்துள்ளார். கேரளாவில் இடுக்கி மாவட்டத்தில் உள்ள தங்கமணி என்கிற கிராமத்தைப் பற்றியும் அந்த ஊரில் பல வருடங்களுக்கு முன்பு போலீஸ் ஸ்டேஷனில் நடைபெற்ற, அதேசமயம் அவ்வளவாக வெளியே தெரியாமல் போன ஒரு பாலியல் பலாத்கார கொலை மற்றும் அதன் பின்னணி பற்றியும் தான் இந்த படத்தின் மையக் கருவாக சொல்லப்படுகிறதாம்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்த படத்தின் டீசர் வெளியானபோது இதுகுறித்த சில காட்சிகளும் அதில் இடம்பெற்று இருந்தன. இந்த நிலையில் தங்கமணி கிராமத்தைச் சேர்ந்த வி.ஆர்.பைஜூ என்பவர் தங்களது கிராமத்தைப் பற்றிய ஒரு தவறான கண்ணோட்டத்தை உருவாக்கும் விதமாக இந்த படத்தில் காட்சிகள் இடம் பெற்றுள்ளன என்றும் அவற்றை நீக்க உத்தரவிட வேண்டும் என்றும் வழக்கு தொடர்ந்து உள்ளார். மேலும் இந்த படம் வெளியானால் தங்களது கிராமத்தையே மற்ற நகரங்களில் இருந்து மக்கள் வேறுபடுத்தி பார்க்கும் கண்ணோட்டத்தையும் ஏற்படுத்தி விடும் அபாயம் இருக்கிறது என்றும் அதில் கூறியுள்ளார்.