பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

மலையாளத்தில் கடந்த சில வருடங்களாக சிறிய பட்ஜெட்டில் உருவாகும் படங்கள் எதிர்பாராத விதமாக 50 கோடி வசூலிக்கும் அளவிற்கு மிகப்பெரிய வெற்றியை பெற்று ஆச்சரியப்படுத்துவது தொடர்ந்து வருகிறது. இந்த வருடத்தில் அப்படி முதல் படமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான 'பிரேமலு' என்கிற படம் வெளியான முதல் நாளில் இருந்தே வரவேற்பு பெற்று 50 கோடி வசூலையும் தாண்டி விட்டது. பெரிய அளவில் ரசிகர்களுக்கு அறிமுகம் இல்லாத நஸ்லேன் மற்றும் நமீதா பைஜூ ஜோடியாக நடித்துள்ள இந்த படம் காதலை மையப்படுத்தி வித்தியாசமான கோணத்தில் உருவாகி இருப்பதால் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
இதைத்தொடர்ந்து இந்த படத்தின் ரீமேக் உரிமைக்காக தமிழ், தெலுங்கில் இருந்து சிலர் முயற்சித்து வருகிறார்கள். அதே சமயம் படக்குழுவினர் ரீமேக் உரிமையை தராமல் நேரடியாக ஒவ்வொரு மொழியிலும் டப்பிங் செய்து வெளியிடும் திட்டத்தில் இருக்கிறார்கள். அது மட்டுமல்ல இந்த படம் இயக்குனர் ராஜமவுலியின் மகன் எஸ்எஸ் கார்த்திகேயாவை மிகவும் கவர்ந்து விட்டதால் தெலுங்கில் இந்த படத்தை மொழிமாற்றம் வெளியிடும் உற்சாகத்தையும் வழிகாட்டுதலையும் படக்குழுவதற்கு ஏற்படுத்தி தந்துள்ளார். இதை தொடர்ந்து வரும் மார்ச் 8ஆம் தேதி இந்த படம் தெலுங்கில் வெளியாக இருக்கிறது. இதனை முன்னிட்டு ஐதராபாத்தில் முகாமிட்டுள்ள பிரேமலு படக்குழுவினர் இயக்குனர் ராஜமவுலியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளனர்.