ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
தெலுங்கு திரையுலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் பூரி ஜெகன்நாத். இவர் கடைசியாக விஜய் தேவரகொண்டாவை வைத்து இயக்கிய லைகர் திரைப்படம் மோசமான தோல்வியை சந்தித்தது. இதனைத் தொடர்ந்து ஏற்கனவே நடிகர் ராம் பொத்தினேனியை வைத்து ஐ ஸ்மார்ட் என்கிற வெற்றி படத்தை கொடுத்திருந்த பூரி ஜெகன்நாத் அதன் இரண்டாம் பாகமாக டபுள் ஐ ஸ்மார்ட் என்கிற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக காவ்யா தாபர் நடிக்க, முக்கிய வேடத்தில் நடிகர் சஞ்சய் தத் நடித்துள்ளார். வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது.
சில நாட்களுக்கு முன்பு இந்த படத்தில் இடம் பெற்ற ஸ்டெப்பமார் என்கிற முதல் பாடல் வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து இரண்டாவது பாடலாக மார் முந்தா சோட் சிந்தா என்கிற பாடல் வெளியானது. ஆனால் இந்தப் பாடலில் இடம்பெற்றுள்ள வரிகள் தெலுங்கானாவின் பிரதான கட்சிகளில் ஒன்றான ராஷ்ட்ரிய சமிதி தலைவர் சந்திரசேகர் ராவ் அடிக்கடி பேசும் ஒரு முக்கிய வசனத்தை கிண்டல் அடிக்கும் விதமாக இடம் பெற்றுள்ளதாக தற்போது ஒரு சர்ச்சை எழுந்துள்ளது. இது குறித்து அந்த கட்சியைச் சேர்ந்த தலைவர் ரஜிதா ரெட்டி என்பவர் இயக்குனர் பூரி ஜெகன்நாத் மற்றும் படக்குழுவினருக்கு எதிராக போலீசில் புகார் அளித்துள்ளார்.