இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய நேரம் படத்தில் அறிமுகமான நடிகை நஸ்ரியா முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்தவர். அதைத் தொடர்ந்து தமிழில் ராஜா ராணி, நையாண்டி, மலையாளத்தில் பெங்களூரு டேய்ஸ், ஓம் சாந்தி ஓசானா உள்ளிட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகையாக மாறினார். ஆனாலும் பீக்கில் இருந்த சமயத்தில் நடிகர் பஹத் பாசிலை காதலித்து திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு கொஞ்ச காலம் ஒதுங்கினார். இந்த நிலையில் மீண்டும் ட்ரான்ஸ், அண்டே சுந்தரானிக்கி என சமீபகாலமாக செலெக்ட்டிவ்வான படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார் நஸ்ரியா.
தற்போது மலையாளத்தில் உருவாகி வரும் சூட்சும தர்ஷினி என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் நஸ்ரியா. கடந்த மே மாத இறுதியில் துவங்கிய இதன் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. இந்த நிகழ்வை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். கடந்த 2018ல் மலையாளத்தில் வெளியான நான்சென்ஸ் என்கிற படத்தை இயக்கிய எம்.சி ஜிதின் என்பவர் இந்த படத்தை இயக்கியுள்ளார். இதில் கதாநாயகனாக மின்னல் முரளி இயக்குனரும் கடந்த வருடம் வெளியாகி வெற்றி பெற்ற ஜெய ஜெய ஜெய ஜெய ஹே மற்றும் சமீபத்தில் வெளியான குருவாயூர் அம்பல நடையில் உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்தவருமான பஷில் ஜோசப் நடிக்கிறார்.