தணிக்கை நடைமுறையில் உள்ள சிக்கல் : 'பராசக்தி' வெளியீடும் தள்ளிப் போகலாம் | பெண் இயக்குனர் இயக்கிய படமா? ராம்கோபால் வர்மா ஆச்சரியம் | ஜனநாயகன் ரிலீஸ் சிக்கல் : விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த திரைப்பிரபலங்கள் | தெலுங்கில் மாஸ் காட்டிய 'அகண்டா-2' முதல்... பீல் குட் மூவி 'அங்கம்மாள்' வரை இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | 'ஜனநாயகன்' தள்ளிப்போனதால் நிகிலா விமல் படத்துக்கு அடித்த ஜாக்பாட் | 'பராசக்தி' படத்தில் பசில் ஜோசப் ; உறுதி செய்த சிவகார்த்திகேயன் | சிறப்பு பாடல்களுக்கு இனிமேல் நடனமாட மாட்டேன்!- ஸ்ரீ லீலா வெளியிட்ட தகவல் | 'பராசக்தி'யில் யுவன் சங்கர் ராஜா பாடிய 'சேனைக் கூட்டம்' பாடல் வெளியானது! | கார்த்தியின் 'வா வாத்தியார்' பொங்கலுக்கு திரைக்கு வருகிறதா? | 'தக் லைப்' விவகாரம் : அப்போது குரல் கொடுக்காத விஜய்.. |

நடிகர் மம்முட்டி கடந்த சில மாதங்களாக உடல்நல குறைவு காரணமாக ஓய்வெடுத்து வந்தவர், தற்போது மீண்டும் சுறுசுறுப்பாக தனது படங்களின் படப்பிடிப்புகளில் கலந்து கொண்டு வருகிறார். அந்த வகையில் மோகன்லாலுடன் தான் இணைந்து நடித்து வரும் 'பேட்ரியாட்' படத்தின் படப்பிடிப்பை சமீபத்தில் தான் நிறைவு செய்தார் மம்முட்டி. அதுமட்டுமல்லாமல் சில படங்களில் நட்புக்காக கெஸ்ட் ரோல்களிலும் நடித்து வருகிறார் மம்முட்டி. அந்த வகையில் விரைவில் வெளியாக இருக்கும் 'சத்தா பச்சா' படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் மம்முட்டி.
இதை அடுத்து 'தொடரும்' படத்தில் வில்லனாக அறிமுகமாகி மிரட்டிய நடிகர் பிரகாஷ் வர்மா தற்போது ஹீரோவாக நடிக்க, பிரபல இயக்குனர் ரஞ்சித் இயக்க உள்ள புதிய படத்திலும் நட்புக்காக மம்முட்டி சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். இதில் ஆச்சரியம் என்னவென்றால் கடந்த 2004ல் மம்முட்டி நடித்த பிளாக் திரைப்படத்தில் அவர் கரிக்காமுரி சண்முகம் என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதே கதாபாத்திரத்தில் தான் இந்த படத்தில் கேமியோ ரோலில் தோன்றுகிறாராம் மம்முட்டி. இதன் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.