தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
மலையாளத்தில் கடந்த 2007ல் மம்முட்டி நடிப்பில் வெளியான படம் 'பிக் பி'. கேங்ஸ்டர் படங்களில் ஒரு புதிய பாணியில் உருவான இந்த படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இயக்குனர் அமல் நீரத் இயக்கியிருந்த இந்தப்படத்தில் மம்முட்டி பிலால் என்கிற கேங்ஸ்டராக நடித்திருந்தார். இந்தப்படத்தின் இரண்டாம் பாகம் பிலால் என்கிற பெயரில் உருவாக இருக்கிறது என கடந்த சில வருடங்களாகவே சொல்லப்பட்டு வந்தது. கடந்த மார்ச் மாதம் அதற்கான அறிவிப்பும் வெளியானது.
ஆனால் கொரோனா தாக்கம் காரணமாக இந்தப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. மேலும் வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடத்தவேண்டும் என்பதால் தற்போதைக்கு சாத்தியமில்லை என இந்தப்படம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக இதே மம்முட்டி-அமல் நீரத் கூட்டணியில் 'பீஷ்ம பர்வம்' என்கிற புதிய படம் துவங்கப்படுவதாக புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. நடிகர் துல்கர் சல்மான் இந்தப்படம் குறித்த அறிவிப்பை மம்முட்டியின் பர்ஸ்ட்லுக் போஸ்டருடன் வெளியிட்டுள்ளார். இந்தப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் கேரளாவுக்குள்ளேயே நடைபெற இருக்கிறதாம்.