தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
பழம்பெரும் மலையாள திரைப்பட இசை அமைப்பாளர் ஐசக் தாமஸ் கொடுக்காப்பள்ளி. ஏராளமான மலையாள படங்களுக்கு இசை அமைத்துள்ளார். இவர் இசை அமைத்த ஆதாமின்ட மகன் அபு படத்திற்கு சிறந்த இசை அமைப்பாளருக்கான தேசிய விருது பெற்றார். இதுதவிர 4 முறை சிறந்த இசை அமைப்பாளருக்கான மாநில விருது பெற்றுள்ளார்.
தமிழில் குருஷேத்திரம், தூவானம், வர்ணம் உள்பட சில படங்களுக்கு இசை அமைத்துள்ளார். கன்னடம் மற்றும் இந்தி படங்களுக்கும் இசை அமைத்துள்ளார். 72 வயதான ஐசக் தாமஸ் முதுமை காரணமாக திரைப்படத்துறையில் இருந்து விலகி தன் குடும்பத்தினருடன் சென்னையில் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று அவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்ட மரணம் அடைந்தார். அவருக்கு மலையாள திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.