தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
தெலுங்கு இயக்குனர் சுரேஷ்பாபுவின் மகன்களில் ஒருவரான ராணா டகுபதி, பாகுபலி படத்தில் வில்லனாக நடித்ததை தொடர்ந்து, தற்போது தெலுங்கில் முன்னணி கதாநாயகனாக ஒரு இடத்தை பிடித்து நின்றுவிட்டார். இதையடுத்து அவரது தம்பி அபிராம் டகுபதியும் விரைவில் ஹீரோவாக அறிமுகமாக இருக்கிறார். இந்தப்படத்தை பிரபல இயக்குனர் தேஜா இயக்க உள்ளார். சமீபத்திய பேட்டி ஒன்றில் இந்த தகவலை அவரே கூறி இருக்கிறார். நடிகை ஸ்ரீரெட்டி காஸ்டிங் கவுச் பற்றி வெளியிட்ட அதிரடி தகவல் மூலம், பரபரப்பான செய்திகளில் இடம் பிடித்தவர் தான் இந்த அபிராம்..
தான் அறிமுகமாகும் படம் பற்றி அபிராம் கூறும்போது, “என் தாத்தாவின் ஆசை என்னையும் நடிகனாக்கி பார்க்கவேண்டும் என்பது.. அவர் இருந்திருந்தால் அது முன்கூட்டியே நடந்திருக்கும். தற்போது எனது தந்தையின் ஆதரவுடன் ஹீரோவாக அறிமுகமாகிறேன். ஏற்கனவே 'நானே ராஜா நானே மந்திரி' பட தயாரிப்பில் இயக்குனர் தேஜாவுடன் இணைந்து பணிபுரிந்துள்ளேன். அவர் அறிமுகப்படுத்திய பல நடிகர்கள் மிகப்பெரிய அளவில் பெயர் பெற்றுள்ளனர். மேலும் அவர் சொன்ன கதை என் மாமா வெங்கடேஷ், சகோதரர் ராணா உட்பட குடும்பத்தினர் அனைவருக்குமே பிடித்துவிட்டது. தற்போதிருக்கும் நிலைமை சீரானதும் பட வேலைகள் தொடங்கும்” என கூறியுள்ளார் அபிராம் டகுபதி.