பிரமானந்தம் - யோகிபாபு சந்திப்பு ஏன்? | ஆந்திரா மதுபான ஊழல் ; விசாரணை வளையத்தில் நடிகை தமன்னா : கோலிவுட் போல் டோலிவுட்டும் கலக்கம் | 3 மணி நேரம் ஓடப் போகும் 'வார் 2' | வாழ்க்கை என்பது ஒரு வட்டம் ; ராஷி கண்ணாவின் புதிய மகிழ்ச்சி | ஸ்வேதா மேனன் மீது எப்ஐஆர் பதிவு ; நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிட விடாமல் தடுக்கும் முயற்சியா? | நீங்க எனக்கு இன்ஸ்பிரேசன் : சிம்ரனை பாராட்டிய திரிஷா | இதுவே உங்கள் மகளாக இருந்தால் என்ன செய்வீர்கள் ? மம்முட்டியிடம் கேள்வி எழுப்பிய பெண் தயாரிப்பாளர் | இதைவிட பெருமை என்ன இருக்கு : முதல்வர் சந்திப்பு குறித்து நடிகை எம்.என்.ராஜம் நெகிழ்ச்சி | தனுஷின் சகோதரிகளை இன்ஸ்டாகிராமில் பின்தொடரும் மிருணாள் தாக்கூர் | 'புஷ்பா 2' தியேட்டர் நெரிசல் விவகாரம்: மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் |
கொரோனா இரண்டாவது அலைக்குப் பிறகு தியேட்டர்களை நோக்கி ரசிகர்கள் அதிகமாக வராமலே இருந்தார்கள். ஆனால், கடந்த வாரம் சிவகார்த்திகேயன் நடித்த 'டாக்டர்' படத்திற்கு ரசிகர்கள் அதிக அளவில் வந்தனர். 50 சதவீத இருக்கைகளுக்குத்தான் அனுமதி என்றாலும் அதற்கே பல தியேட்டர்களில் பல காட்சிகள் ஹவுஸ்புல் ஆகியுள்ளது. அது இந்த வாரமும் தொடர்வதாக தியேட்டர்காரர்கள் மகிழ்ச்சியாக உள்ளார்கள்.
அது மட்டுமல்ல நேற்று வெளியான 'அரண்மனை 3' படத்திற்கான விமர்சனங்கள் சரியாக இல்லை என்றாலும் அந்தப் படத்திற்கும் ரசிகர்கள் வருவது தியேட்டர்காரர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியைத் தந்துள்ளது.
நேற்று முதலே தியேட்டர்களுக்கு 100 சதவீத இருக்கைகளுக்கான அனுமதி கிடைக்கும் என எதிர்பார்த்தார்கள். ஆனால், தமிழக அரசு இன்னமும் 50 சதவீத அனுமதியையே தொடர்கிறது. தீபாவளிக்காவது 100 சதவீத அனுமதி கிடைக்கும் என திரையுலகத்தினர் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.