பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

நாக சைதன்யாவுடனான பிரிவை அறிவித்த சமந்தா சில நாட்களாக ஓய்வில் இருந்தார். மன அமைதிக்காக கோவில்களுக்கு சென்று வந்தார். தற்போது விவாகரத்து தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளை தனது வழக்கறிஞரிடம் ஒப்படைத்து விட்டு நடிப்பில் தீவிர கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறார்.
இந்த நிலையில் தமிழ், தெலுங்கில் தயாராகும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இதனை புதுமுக இயக்குனர் சாந்தரூபன் ஞானசேகரன் இயக்குகிறார். படத்தை ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரிக்கிறது. மற்ற நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட இருக்கிறது. தமிழில் ஒரு புது முயற்சியாக பேண்டஸி ரொமாண்டிக் படமாக , பெண் கதாப்பாத்திரத்தை மையமாக வைத்து இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது.