பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

தமிழ், தெலுங்கில் ஒரு காலத்தில் நம்பர் 1 நடிகையாக இருந்தவர் த்ரிஷா. கடந்த 19 வருடங்களுக்கும் மேலாக இன்னமும் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார். மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் 'பொன்னியின் செல்வன்' படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவர் நடித்து முடித்துள்ள 'கர்ஜனை, சதுரங்க வேட்டை 2, ராங்கி' ஆகிய படங்கள் இன்னும் வெளியாகவில்லை.
அபூர்வமாய் சமூக வலைத்தளங்கள் பக்கம் வருபவர் த்ரிஷா. தற்போது துபாயில் சுற்றுலாப் பயணத்தில் இருக்கிறார் போலிருக்கிறது- துபாயில் உள்ள பிரபல ஓட்டல் ஒன்றின் இருப்பிடத்தைக் குறிப்பிட்டு, “என்னைப் பொறுத்தவரை வாழ்க்கை என்பது சாதாரண விஷயமல்ல. அது எப்போதுமே ஒரு அற்புதம்,” எனப் பதிவிட்டுள்ளார்.
அவரது முகத்தில் அப்படி ஒரு மகிழ்ச்சி. வாழ்க்கையின் அர்த்தத்தை உணர்ந்து கொண்ட மகிழ்ச்சியின் வெளிப்பாடோ அது ?.