பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

தமிழில் ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படம் மூலம் ஒரு நடிகராக அறிமுகமாகி பின் இசையமைப்பாளராக அவதாரம் எடுத்து தற்போது தெலுங்கு திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் தமன்.. அதேசமயம் நானி நடிப்பில் சமீபத்தில் வெளியான டக் ஜெகதீஷ் படத்தில் முதலில் பின்னணி இசை அமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்ட தமன் திடீரென அந்தப்படத்தில் இருந்து வெளியேறினார்.. பின்னர் அவருக்கு பதிலாக மலையாள சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான கோபிசுந்தர் அந்தப்படத்திற்கு பின்னணி இசையமைத்தார்.
தான் விலகியதற்கான காரணம் குறித்து தற்போது ஒரு பேட்டியில் கூறியுள்ளார் தமன். அந்தப்படத்தில் இரண்டு பாடல்களுக்கு இசையமைத்த தமன், பின்னணி இசை வேலையையும் முழுதாக முடித்து கொடுத்து விட்டாராம். ஆனால் நானிக்கு அவர் உருவாக்கிய பின்னணி இசை பிடிக்கவில்லை. அதனால் தான் அந்தப்படத்தில் இருந்து வெளியேறினேன் என கூறியுள்ள தமன், “எனது சினிமா பயணத்தில் இப்படி நடப்பது இதுதான் முதல் முறை. எல்லா படங்களுக்கும் இசையமைப்பது போன்று முழு அர்ப்பணிப்புடன் தான் இசையமைத்தேன்.. எந்த இடத்தில் அவர்களுக்கு தவறாக மாறிப்போனது என தெரியவில்லை” என கூறியுள்ளார்.