பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

சென்னை : 'தியேட்டரில் ரகளை செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, ஆன்டி இண்டியன் பட இயக்குனர், போலீசில் புகார் அளித்து உள்ளார்.
சென்னை, திருமுல்லைவாயலைச் சேர்ந்தவர் இளமாறன், 53. சமூக வலைதளமான, 'யு டியூப்'பில், திரைப்படங்களை விமர்சனம் செய்வார். இதனால், 'புளு சட்டை' மாறன் என அழைக்கப்பட்டு வருகிறார். இவர், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று அளித்துள்ள புகார்:'மூன் பிக்சர்ஸ்' என்ற நிறுவனத்தை நடத்தி வரும் ஆதம்பாவா என்பவரின் தயாரிப்பில், ஆன்டி இண்டியன் என்ற படத்தை இயக்கி உள்ளேன்.
படம் வெளியாகி 240 தியேட்டர்களில் ஓடுகிறது. முறையாக தணிக்கை செய்து, படத்தை வெளியிட்டுள்ளோம். தேனி மாவட்டம், பெரியகுளத்தில் உள்ள தியேட்டர் ஒன்றில், ஆன்டி இண்டியன் படத்தை திரையிடக் கூடாது' என, 10க்கும் மேற்பட்ட நபர்கள் நேற்று முன்தினம் இரவு தகராறு செய்துள்ளனர். தங்களை தேசிய கட்சி பிரதிநிதிகள் என்றும் கூறியுள்ளனர்.
மலிவான விளம்பரம், சுய அரசியல் லாபத்திற்காக ரகளை செய்து, எங்களிடம் பணம் பறிக்கும் நோக்கில் செயல்படும் நபர்கள் மீது, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.