ரிலீஸாகாத ‛மஞ்சும்மேல் பாய்ஸ்' பட நடிகரின் பட காட்சிகள் ஆன்லைனில் லீக் ; உதவி இயக்குனர் மீது புகார் | நிவின்பாலி மீதான மோசடி வழக்கு விசாரணையை நிறுத்தி வைத்த நீதிமன்றம் | இந்தாண்டு பல பாடங்களை கற்றுத் தந்தது : ஹன்சிகா | வேட்பு மனு நிராகரிப்பு சரிதான் ; பெண் தயாரிப்பாளரின் கோரிக்கையை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | 2வது திருமண சர்ச்சைக்கு இடையில் முதல் மனைவியுடன் விழாவில் பங்கேற்ற மாதம்பட்டி ரங்கராஜ் | கிஸ் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் | முருகனாக நடித்த ஸ்ரீதேவி; 13 வயதில் ஹீரோயின் ஆனவர்: இன்று ஸ்ரீதேவியின் 62வது பிறந்தநாள் | தெரு நாய்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து விமர்சனத்தில் சிக்கிய ஜான்வி கபூர்! | சினிமாவில் 50... நம்ம சூப்பர் ஸ்டாரை நானும் பாராட்டுகிறேன் : கமல் | நாகார்ஜுனாவின் வில்லன் வேடத்திற்கான எதிர்பார்ப்பை எகிற வைத்த ரஜினி! |
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் கதாநாயகனாக நடித்துள்ள 'புஷ்பா' படம் நேற்று ஐந்து மொழிகளில் வெளியானது. இருவிதமான விமர்சனங்கள் வெளிவந்துள்ள இப்படத்திற்கு முதல் நாள் வசூல் சிறப்பாக இருந்ததாகத் தெரிவிக்கிறார்கள். இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படம் ஐந்து மொழிகளில் வெளியானதால் ஒவ்வொரு மொழியிலும் வெளியீட்டிற்கு முன்னதாக பத்திரிகையாளர் சந்திப்புகளை நடத்தினார்கள்.
மும்பை, பெங்களூரூ, கொச்சி, ஐதராபாத் ஆகிய நகரங்களில் மொழிக்கு ஒன்றாக பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. அவை அனைத்திலும் ராஷ்மிகா தவறாமல் கலந்து கொண்டார். அதேசமயம், சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் மட்டும் அவர் கலந்து கொள்ளாமல் புறக்கணித்துள்ளார்.
படத்தில் ராஷ்மிகாவிற்கும் பெரிய அளவில் பாராட்டுக்கள் வரவில்லை. கடைசி நேரத்தில் சமந்தா நடனமாடிய ஒரு பாடலைச் சேர்த்தார்கள். அந்தப் பாடல் சர்ச்சையை ஏற்படுத்தி பெரிய ஹிட் ஆகிவிட்டது. சமந்தா அலையில் ராஷ்மிகாவின் பெயர் அடித்துச் செல்லப்பட்டுவிட்டது என்பதுதான் பலரது கருத்தாக உள்ளது.