பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

இருட்டு அறையில் முரட்டு குத்து, ஜாம்பி படங்கள் மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். தனது நண்பர்களுடன் காரில் பயணம் செய்த போது மாமல்லபுரம் அருகே உள்ள சூளேரிக்காடு பகுதியில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் யாஷிகாவின் தோழி வள்ளிச்செட்டி பவணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ள யாஷிகா குணமாகி வருகிறார். தேறி வரும் யாஷிகா அடிக்கடி தன்னுடைய உடல் நிலை குறித்து தனது வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் விபத்திற்கு பின் முதன் முறையாக எழுந்து நடந்த வீடியோ ஒன்றை பதிவிட்டு 95 நாட்களுக்கு முன் குழந்தை போல முதல் அடி எடுத்து வைக்கிறேன் என்று கூறி இருந்தார்.
உடல் நிலை குணமான நிலையில் யாஷிகா சென்னையில் ஒரு கடை திறப்பு விழாவில் கலந்துகொண்ட படத்தை வெளியிட்டு இருந்தார். தற்போது பூரண குணமடைந்துள்ள யாஷிகா, பொது நிகழ்வுகளில் கலந்துக்கொண்டு வருகிறார். சமீபத்தில் கூட பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு தனது முன்னாள் காதலரான நிரூப்புக்கு சில அறிவுரைகளை கூறிவிட்டு வந்தார். இந்நிலையில் முன்புபோல் தொடர்ந்து புகைப்படங்களை எடுத்து வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் கிறிஸ்துமஸ் பண்டிகை எடுக்கப்பட்ட போட்டோஷூட் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.