பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

பிரபல பின்னணி பாடகரும், நடிகருமான மாணிக்க விநாயகம்(78) உடல்நலக்குறைவால் காலமானார். அண்மையில் இதயக்கோளாறு காரணமாக அறுவை சிகிச்சை செய்திருந்த நிலையில் இன்று(டிச., 26) மாலை மாரடைப்பால் காலமானார். 800க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி உள்ள இவர், திருடா திருடி, திமிரு, பேரழகன், சந்தோஷ் சுப்ரமணியம் உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.
மயிலாடுதுறையை சேர்ந்த மாணிக்க விநாயகம், பிரபல நடன ஆசிரியர் வழுவூர் ராராமையாவின் இளைய மகனாவார். 1948ம் ஆண்டு டிச., 10ல் பிறந்த இவர் இளம் வயது முதலே நன்றாக பாடக் கூடியர். கனீர் குரலுக்கு சொந்தக்காரரான இவர் தமிழில் விக்ரம் நடித்த தில் படத்தில் வித்யாசாகர் இசையமைப்பில் கண்ணுக்குல கெழுத்தி.... என்ற பாடல் மூலம் பாடகராக அறிமுகமானார். தொடர்ந்து ஏலே இமயமலை... (தவசி), தேரடி வீதியில தேவதை வந்தா... (ரன்), பொம்பளைங்க காதலைதான் நம்பிவிடாதே... (உன்னை நினைத்து), விடை கொடு எங்கள் நாடே.... (கன்னத்தில் முத்தமிட்டால்), கொடுவா மீச அறுவா பார்வை.... (தூள்), சின்ன வீடா வரட்டுமா... (ஒற்றன்), கொக்கு பற பற... (சந்திரமுகி), கட்டு கட்டு கீரை கட்டு... (திருப்பாச்சி) உள்ளிட்ட ஏராளமான பாடல்களை பாடி உள்ளார்.
![]() |