இனி உறுப்பினர் அல்லாதவர்கள் நடிப்பது கஷ்டம்: சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் பரத் | மைக்கை வைத்துவிட்டு வெளியேறட்டுமா? : வார் 2 விழாவில் டென்ஷனான ஜூனியர் என்டிஆர் | தலைமைக்கு போட்டியிடும் பெண் தயாரிப்பாளரின் வேட்பு மனு குறித்து முன்னாள் பார்ட்னர் எதிர் கருத்து | சிறையில் இருக்கும் நடிகை ரன்யா ராவின் வளர்ப்பு தந்தைக்கு மீண்டும் வழங்கப்பட்ட டிஜிபி பதவி | பிளாஷ்பேக்: திரைக்கதை வசனம் எழுதிய ரஜினி; வெள்ளித்திரையில் மின்னத் தவறிய “வள்ளி” | அபினய்-க்கு உதவிய தனுஷ் | இந்தியாவில் முதல் நாளில் வசூலைக் குவித்த படங்கள் | துருவ் விக்ரம் படத்தில் மூன்று கதாநாயகிகள்? | 'தலைவன் தலைவி' வெற்றி, சம்பளத்தை உயர்த்தும் விஜய் சேதுபதி? | ‛பல்டி'யில் கபடி வீரராக களமிறங்கிய சாந்தனு: முன்னோட்ட வீடியோ வெளியீடு |
பிரபல பின்னணி பாடகரும், நடிகருமான மாணிக்க விநாயகம்(78) உடல்நலக்குறைவால் காலமானார். அண்மையில் இதயக்கோளாறு காரணமாக அறுவை சிகிச்சை செய்திருந்த நிலையில் இன்று(டிச., 26) மாலை மாரடைப்பால் காலமானார். 800க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி உள்ள இவர், திருடா திருடி, திமிரு, பேரழகன், சந்தோஷ் சுப்ரமணியம் உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.
மயிலாடுதுறையை சேர்ந்த மாணிக்க விநாயகம், பிரபல நடன ஆசிரியர் வழுவூர் ராராமையாவின் இளைய மகனாவார். 1948ம் ஆண்டு டிச., 10ல் பிறந்த இவர் இளம் வயது முதலே நன்றாக பாடக் கூடியர். கனீர் குரலுக்கு சொந்தக்காரரான இவர் தமிழில் விக்ரம் நடித்த தில் படத்தில் வித்யாசாகர் இசையமைப்பில் கண்ணுக்குல கெழுத்தி.... என்ற பாடல் மூலம் பாடகராக அறிமுகமானார். தொடர்ந்து ஏலே இமயமலை... (தவசி), தேரடி வீதியில தேவதை வந்தா... (ரன்), பொம்பளைங்க காதலைதான் நம்பிவிடாதே... (உன்னை நினைத்து), விடை கொடு எங்கள் நாடே.... (கன்னத்தில் முத்தமிட்டால்), கொடுவா மீச அறுவா பார்வை.... (தூள்), சின்ன வீடா வரட்டுமா... (ஒற்றன்), கொக்கு பற பற... (சந்திரமுகி), கட்டு கட்டு கீரை கட்டு... (திருப்பாச்சி) உள்ளிட்ட ஏராளமான பாடல்களை பாடி உள்ளார்.
![]() |