பிளாஷ்பேக் : ஆணாக அறிமுகமான விஜய நிர்மலா | 'குபேரா' படத்திற்கு அழுத்தம் கொடுத்த ஓடிடி நிறுவனம் | ராஜமவுலி, மகேஷ்பாபு பட வாய்ப்பைத் தவிர்த்த விக்ரம்? | சாந்தனு ஜோடியாக அஞ்சலி நாயர் | 'திருக்குறள்' படம் உருவானது எப்படி?: இயக்குனர் விளக்கம் | அஜ்மல் மீது நடிகை பாலியல் குற்றச்சாட்டு | இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா |
பிரபல பின்னணி பாடகரும், நடிகருமான மாணிக்க விநாயகம்(78) உடல்நலக்குறைவால் காலமானார். அண்மையில் இதயக்கோளாறு காரணமாக அறுவை சிகிச்சை செய்திருந்த நிலையில் இன்று(டிச., 26) மாலை மாரடைப்பால் காலமானார். 800க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி உள்ள இவர், திருடா திருடி, திமிரு, பேரழகன், சந்தோஷ் சுப்ரமணியம் உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.
மயிலாடுதுறையை சேர்ந்த மாணிக்க விநாயகம், பிரபல நடன ஆசிரியர் வழுவூர் ராராமையாவின் இளைய மகனாவார். 1948ம் ஆண்டு டிச., 10ல் பிறந்த இவர் இளம் வயது முதலே நன்றாக பாடக் கூடியர். கனீர் குரலுக்கு சொந்தக்காரரான இவர் தமிழில் விக்ரம் நடித்த தில் படத்தில் வித்யாசாகர் இசையமைப்பில் கண்ணுக்குல கெழுத்தி.... என்ற பாடல் மூலம் பாடகராக அறிமுகமானார். தொடர்ந்து ஏலே இமயமலை... (தவசி), தேரடி வீதியில தேவதை வந்தா... (ரன்), பொம்பளைங்க காதலைதான் நம்பிவிடாதே... (உன்னை நினைத்து), விடை கொடு எங்கள் நாடே.... (கன்னத்தில் முத்தமிட்டால்), கொடுவா மீச அறுவா பார்வை.... (தூள்), சின்ன வீடா வரட்டுமா... (ஒற்றன்), கொக்கு பற பற... (சந்திரமுகி), கட்டு கட்டு கீரை கட்டு... (திருப்பாச்சி) உள்ளிட்ட ஏராளமான பாடல்களை பாடி உள்ளார்.
![]() |