பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

சின்னத்திரை நட்சத்திர நாயகி தர்ஷா குப்தா. அவளும் நானும் என்ற தொடர் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். அதன்பிறகு முள்ளும் மலரும், செந்தூரப்பூவே தொடர்களில் நடித்தார். தற்போது சினிமாவில் ஹீரோயின் ஆகிறார்.
நெப்டியூன் எண்டர்டெய்ன்மென்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் பெயரிடப்படாத படத்தில் தர்ஷா குப்தாதான் நாயகி. நாயகனாக அசோக் குமார் நடிக்கிறார். டைகர் தங்கதுரை,அங்காடித்தெரு மகேஷ் மற்றும் பலர் நடிக்கிறார்கள். இன்பான்ட் பரத் ஒளிப்பதிவு செய்கிறார். ஜெய்கிருஷ்ணா இசை அமைக்கிறார். குருசேனாபதி இயக்குகிறார்.
படம் பற்றிஅவர் கூறியதாவது: ஒரு மலை பிரதேசத்தில் அடுத்தடுத்து நடக்கின்ற விசித்திரமான கொலைகளை மையமாக வைத்து உருவாகும் படம். ஏற்காடு, மலேசியா மற்றும் பல இடங்களில் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது, என்றார்.