இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
பிக்பாஸ் நிகழ்ச்சி சமீபத்தில் முடிவடைந்தது. இதில் ராஜூ டைட்டில் வென்றார். பிரியங்காவும், பாவனியும் இரண்டாவது, 3வது இடத்துக்கு வந்தனர். பொதுவாக பிக்பாஸ் இறுதி போட்டிக்கு முன்னாள் டைட்டில் வின்னர்கள் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த முறை இறுதி போட்டிக்கு முன்னாள் டைட்டில் வின்னர் ஆரி அர்ஜூனன் அழைக்கப்படவில்லை.
இதுகுறித்து அவர் தனது வருத்தத்தை பதிவு செய்திருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது: பிக்பாஸ் சீசன் 5 கிராண்ட் பினாலேவில் கலந்து கொள்ள வேண்டும் என்று மிகவும் ஆசையுடனும், ஆர்வத்துடனும் இருந்தேன். கமல்ஹாசன் மற்றும் இதர போட்டியாளர்களை சந்திக்க வேண்டும் என்று ஆவலுடன் இருந்தேன். ஆனால் துரதிர்ஷ்டவசமாக எனக்கு பிக்பாஸ் கிராண்ட் பினாலே நிகழ்ச்சிக்கு அழைப்பு வரவில்லை. என்கிறார்.
மேலும் இந்த சீசனில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவரான இமான் அண்ணாச்சியும் இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.