ரிலீஸாகாத ‛மஞ்சும்மேல் பாய்ஸ்' பட நடிகரின் பட காட்சிகள் ஆன்லைனில் லீக் ; உதவி இயக்குனர் மீது புகார் | நிவின்பாலி மீதான மோசடி வழக்கு விசாரணையை நிறுத்தி வைத்த நீதிமன்றம் | இந்தாண்டு பல பாடங்களை கற்றுத் தந்தது : ஹன்சிகா | வேட்பு மனு நிராகரிப்பு சரிதான் ; பெண் தயாரிப்பாளரின் கோரிக்கையை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | 2வது திருமண சர்ச்சைக்கு இடையில் முதல் மனைவியுடன் விழாவில் பங்கேற்ற மாதம்பட்டி ரங்கராஜ் | கிஸ் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் | முருகனாக நடித்த ஸ்ரீதேவி; 13 வயதில் ஹீரோயின் ஆனவர்: இன்று ஸ்ரீதேவியின் 62வது பிறந்தநாள் | தெரு நாய்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து விமர்சனத்தில் சிக்கிய ஜான்வி கபூர்! | சினிமாவில் 50... நம்ம சூப்பர் ஸ்டாரை நானும் பாராட்டுகிறேன் : கமல் | நாகார்ஜுனாவின் வில்லன் வேடத்திற்கான எதிர்பார்ப்பை எகிற வைத்த ரஜினி! |
ஏமாற்றுபவர்கள் இருக்கும்வரை ஏமாறுபவர்களும் இருப்பார்கள் என்பது சொல்வழக்கு. தமிழ் சினிமாவில் கஷ்டப்பட்டு வட்டிக்கு வாங்கி படம் எடுப்பவர்கள் ஒரு பக்கம் இருக்க அவர்களை ஏமாற்றி பணம் பறிக்கும் கும்பலும் இன்னொரு பக்கம் இருந்து கொண்டுதான் இருக்கிறது. இதுவரை திரையரங்குகளில் படம் போடுகிறேன் என்று தயாரிப்பாளர்களிடம் மிகப்பெரிய மோசடியில் ஈடுபட்டு வந்த கும்பல் சிலகாலமாக ஓடிடி நிறுவனங்களுக்கு உங்கள் படத்தை நல்ல விலைக்கு விற்று தொகையை பெற்று தருகிறேன் என்று புது வழியை கண்டுபிடித்து அதில் ஏமாற்றி வருகின்றனர்.
இவ்வாறு பணத்தை இழந்த தயாரிப்பாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கம் சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஆனால் ஏமாந்தது சின்ன தயாரிப்பாளர்கள் ஏமாற்றியது பெரிய தயாரிப்பாளர்கள் என்பதால் நடவடிக்கைகளிலிருந்து எளிதில் தப்பி வருகின்றனர்.