இரண்டு மனைவிகளுடன் விவகாரத்து : வெளிப்படையாகப் பேசிய அமீர்கான் | கரிஷ்மா கபூர் முன்னாள் கணவர் திடீர் மரணம் | ஜுலை, ஆகஸ்ட்டில் 'துருவ நட்சத்திரம்' படத்தை வெளியிட முயற்சி | விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகிறது 'மெர்சல்' | ஆக்டர் ஆன தஞ்சாவூர் டாக்டர் | சினிமாவை விட்டு விலகப்போகிறேன்: மிஷ்கின் சொல்கிறார் | இமான் இசை நிகழ்ச்சி ரத்து | 1600 தியேட்டர்களில் 'குபேரா' : தயாரிப்பாளர்கள் தகவல் | அடுத்த வாரம் புதிய படங்களின் அப்டேட் வாரம் | விமான விபத்து : சினிமா விழாக்கள் தள்ளி வைப்பு |
ஏமாற்றுபவர்கள் இருக்கும்வரை ஏமாறுபவர்களும் இருப்பார்கள் என்பது சொல்வழக்கு. தமிழ் சினிமாவில் கஷ்டப்பட்டு வட்டிக்கு வாங்கி படம் எடுப்பவர்கள் ஒரு பக்கம் இருக்க அவர்களை ஏமாற்றி பணம் பறிக்கும் கும்பலும் இன்னொரு பக்கம் இருந்து கொண்டுதான் இருக்கிறது. இதுவரை திரையரங்குகளில் படம் போடுகிறேன் என்று தயாரிப்பாளர்களிடம் மிகப்பெரிய மோசடியில் ஈடுபட்டு வந்த கும்பல் சிலகாலமாக ஓடிடி நிறுவனங்களுக்கு உங்கள் படத்தை நல்ல விலைக்கு விற்று தொகையை பெற்று தருகிறேன் என்று புது வழியை கண்டுபிடித்து அதில் ஏமாற்றி வருகின்றனர்.
இவ்வாறு பணத்தை இழந்த தயாரிப்பாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கம் சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஆனால் ஏமாந்தது சின்ன தயாரிப்பாளர்கள் ஏமாற்றியது பெரிய தயாரிப்பாளர்கள் என்பதால் நடவடிக்கைகளிலிருந்து எளிதில் தப்பி வருகின்றனர்.