பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

தமிழில் மாறன், திருச்சிற்றம்பலம், நானே வருவேன் போன்ற படங்களின் நடித்து வரும் தனுஷ் தற்போது தமிழ்- தெலுங்கில் தயாராகும் வாத்தி படத்திலும் நடித்து வருகிறார். வெங்கி அட்லூரி இயக்கும் இந்த படத்தை அடுத்து இன்னொரு தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கும் படத்திலும் நடிக்கப் போகிறார்.
இதற்கிடையே அல்லு அர்ஜூன் நடிப்பில் உருவான புஷ்பா படத்தின் இயக்குனர் சுகுமார் இயக்கும் அடுத்த படத்திலும் தனுஷ் நடிக்க இருப்பதாக தற்போது ஒரு புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பை விரைவில் தொடங்கயிருக்கும் சுகுமார், நானே வருவேன் படத்தில் தனுஷ் நடித்து முடித்ததும் அவருடன் இணையும் புதிய படத்தை தொடங்குகிறார். அந்த வகையில் தனுசும் சுகுமாரும் இணையும் புதிய படம் அடுத்த ஆண்டு தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.