பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

இயக்குனர் பிரியதர்சன் மற்றும் நடிகை லிசி தம்பதியின் மகளான கல்யாணி பிரியதர்ஷன் தனது தாயைப் போல நடிப்புத்துறையை தேர்ந்தெடுத்தார். கடந்த சில வருடங்களில் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகியவற்றில் அங்கொன்றும், இங்கொன்றுமாக சில படங்களில் நடித்து வந்த கல்யாணி தற்போது பிஸியான நடிகையாக மாறிவிட்டார்.
கடந்த நவ-26ல் தமிழில் சிம்புவுடன் நடித்த மாநாடு, டிசம்பர் 3ல் மோகன்லாலின் மரைக்காயர், ஜன-21ல் பிரணவ் மோகன்லாலுக்கு ஜோடியாக நடித்த ஹிருதயம், தற்பொழுது ஜன- 24ல் பிரித்விராஜ் ஜோடியாக நடித்த ப்ரோ டாடி என கடந்த 2 மாதங்களில் மட்டும் கல்யாணி நடித்த நான்கு படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆகி உள்ளது.
இதில் மாநாடு படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதேபோல தற்போது வெளியான ஹிருதயம் படமும் ரசிகர்களின் வரவேற்பை பெற்று தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. ஒடிடியில் வெளியான ப்ரோ டாடி படத்திலும் அவரது நடிப்புக்கு பாராட்டுக்கள் கிடைத்து வருகின்றது. அந்த வகையில் முன்னணி நடிகையாக மாறும் இலக்கை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார் கல்யாணி பிரியதர்ஷன்.