முதல் தெலுங்கு படத்தில் தோல்வியை சந்தித்த அதிதி ஷங்கர் | பிளாஷ்பேக்: ஒரு இசைமேதை தவிர்த்த பாடல், இன்னொரு இசைமேதை பாடிச் சிறப்பித்திருந்ததைச் சொல்ல “ஒரு நாள் போதுமா?” | அவுட்டோர்களுக்கும் தலையணையுடன் பயணிக்கும் ஜான்வி கபூர் | 'கந்தன் மலையில் கதாநாயகி இல்லை' எச்.ராஜா கலகல | மகாராஜாவை தொடர்ந்து மீண்டும் 100 கோடியை எட்டிப் பிடிக்கும் விஜய் சேதுபதி | கூலி படத்தில் சிவகார்த்திகேயன் சிறப்பு வேடத்தில் நடித்துள்ளாரா? | 210 கோடியை அள்ளிய ஆன்மிகப்படம் | 'சன்னிதானம்(P.O)' : சேரன், மஞ்சுவாரியர் வெளியிட்ட யோகிபாபு பட போஸ்டர் | ஒரே இரவில் இரண்டு விருதுகள்: மாளவிகா மோகனன் மகிழ்ச்சி | ‛தி இன்டர்ன்' பட ரீமேக்கில் இருந்து விலகிய தீபிகா படுகோனே |
அட்டகத்தி படத்தின் மூலம் புகழ்பெற்றவர் கானா பாலா. ஆடி போனா ஆவணி என்ற ஒரு பாடல் மூலம் ஓவர் நைட்டில் பிரபலமானார். அதன்பிறகு பீட்சா, கண்ணா லட்டு தின்ன ஆசையா, பரதேசி, சேட்டை என தொடர்ச்சியாக 100 பாடல்களுக்கு மேல் சினிமாவில் பாடி உள்ளார். ஏராளமான பாடல்களை எழுதியும் உள்ளார். 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தும் இருக்கிறார்.
கடந்த சில வருடங்களாக அவருக்கு பாடவோ, நடிக்கவோ பெரிய வாய்ப்புகள் எதுவும் இல்லை. இதனால் தனது வழக்கிறஞர் தொழிலை நடத்தி வந்தார். இந்த நிலையில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தலில் அவர் வசிக்கும் புளியந்தோப்பு பகுதியின் 72வது வார்டில் கவுன்சிலர் பதவிக்கு சுயேட்சையாக போட்டியிடுகிறார். இதற்காக நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். கடந்த முறை இதே வார்டில் போட்டியிட்ட கானா பாலா 4 ஆயிரம் வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.