அனுஷ்காவின் ‛காட்டி' டிரைலர் வெளியீடு : ரிலீஸ் தேதியும் அறிவிப்பு | ரவி மோகனை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் ஆர்யா | பராசக்தி படத்தில் நடிக்காதது ஏன் : லோகேஷ் கனகராஜ் விளக்கம் | ராம் சரண் படம் கைவிடப்பட்டது ஏன் : கவுதம் தின்னனூரி விளக்கம் | சிவகார்த்திகேயனின் மன அழுத்தத்தை போக்கும் பிள்ளைகள் | ‛கிங்டம்' படத்திற்கு எதிர்ப்பு : வருத்தம் தெரிவித்த படக்குழு | 23 ஆண்டுகளுக்கு பின் நாளை மறுநாள் ரீ-ரிலீஸ் ஆகிறது சுந்தரா டிராவல்ஸ் | ஆகஸ்ட் 8ல் 13 படங்கள் வெளியீடா ??? | வரவேற்பைப் பெறாத 'பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீமேக் | கணவர் கிரிஷ் உடன் பிரிவா... : நடிகை சங்கீதா மறுப்பு |
சினிமா துறையில் பாலியல் தொல்லை இருப்பதாக பல நடிகைகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்கள். மீ டூ புகார் அளித்து பரபரப்பு ஏற்படுத்தினார்கள். தயாரிப்பாளர் முதல் பாடல் ஆசிரியர் வரை மீ டூ புகாரில் சிக்கினர்.
சினிமாவில் செல்வாக்கு மிக்க புன்புலத்தில் இருந்து வந்த நடிகைகளும் தங்களுக்கு பாலியல் தொல்லை இருந்தது என்று கூறி வருவது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. தமிழ் சினிமாவின் பெரிய ஆளுமையான சரத்குமாரின் மகள் வரட்சுமி ஒரு தொலைக்காட்சியின் உயர் அதிகாரி தன்னை தவறாக அணுகியதாக குற்றம் சாட்டி இருந்தார்.
இந்த நிலையில் தெலுங்கு சினிமாவின் செல்வாக்கு மிக்க நடிகர் மற்றும் தயாரிப்பாளர் மோகன்பாபுவின் மகளும், நடிகையுமான லட்சுமி மஞ்சுவும் தனக்கும் பாலியல் தொல்லை இருந்ததாக கூறி அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: நானும் பாலியல் தொல்லைகளை எதிர்கொண்டுள்ளேன். சக்தி வாய்ந்த ஒருவரின் மகள் என்பதால், எனக்கு எதவும் அப்படி நடக்காது என்றுதான் ஆரம்பத்தில் நம்பி இருந்தேன். ஆனால் இரக்க மற்றவர்களை நானும் சந்திக்க வேண்டியது இருந்தது. என்று கூறியுள்ளார்.
இவர்களுக்கே இப்படி என்றால் எந்த பின்புலமும் இல்லாமல் சினிமாவுக்கு வரும் பெண்களின் பாதுகாப்பு மிகுந்த கவலை அளிப்பதாக சினிமா ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.