பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

சிவகார்த்திகேயன் நடிக்கும் 20வது படம் தமிழ், தெலுங்கில் தயாராகிறது. இதனை தெலுங்கில் முன்னணி தயாரிப்பு நிறுவனமான சுரேஷ் புரொடக்ஷன் தயாரிக்கிறது. சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ஜதிரத்னலு இயக்குனர் அனுதீப் இயக்குகிறார். இந்த படத்தில் பிரேம்ஜி அமரன், சத்யராஜ், நவீன் பொலிஷெட்டி ஆகியோரும் நடிப்பதாக கூறப்படுகிறது.
சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நடிகை மரியா ரியாபோஷாப்கா நடிக்க இருக்கிறார் என்று ஏற்கெனவே தகவல்கள் வெளியானது. தற்போது அதனை தயாரிப்பு தரப்பு உறுதிப்படுத்தியுள்ளது.
மரியா போலந்து - உக்ரேனிய திரைப்படமான ஈடர் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். ஸ்பை சாகா ஸ்பெஷல் ஓபிஎஸ் 1.5 என்ற வெப் தொடரிலும் நடித்துள்ளார். படத்தில் வரும் வெளிநாட்டு ஹீரோயின் கேரக்டரில் மரியா நடிப்பதாகவும், இதுதவிர மேலும் ஒரு முக்கியமான ஹீரோயின் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.