தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
விஜய் ஆண்டனி நடித்து வரும் படங்களில் ஒன்று கொலை. விடியும் முன் படத்தின் மூலம் கவனம் ஈர்த்த பாலாஜி குமார் இயக்கி உள்ளார். விஜய் ஆண்டனியுடன் ரித்திகா சிங் , ஜான் விஜய், ராதிகா சரத்குமார், முரளி சர்மா, மீனாட்சி சவுத்ரி, சித்தார்த்தா சங்கர், அர்ஜுன் சிதம்பரம், கிஷோர் குமார், சம்கித் போரா உள்பட பலர் நடித்துள்ளனர். சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்துள்ளார், கிரிஷ் கோபாலகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்த படம் 1923ல் நடந்த ஒரு மாடல் அழகியின் கொலையை கருவாக கொண்ட உண்மை கதையை தழுவிய படமாகும். இதுபற்றி இயக்குனர் பாலாஜி குமார் கூறியதாவது: 1923ல் நடந்த டோரதி கிங்கின் கொலை சம்பவத்தை இன்ஸ்பிரேஷனாக எடுத்துக் கொண்டு இந்த படம் உருவாகி உள்ளது. அந்த கொலை சம்பவம் உலகம் முழுவதையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அந்த கொலையின் பின்னால் உள்ள மர்மத்தை அறிய உலகம் துடித்தது. அதுதான் இந்த படம்.
இந்த கொலை சம்பவத்தை நவீன கால பின்னணிக்கு ஏற்றவாறு மாற்ற வேண்டியது இருந்தது. லீலா என்ற மாடல் அழகி கொல்லப்படுகிறார். அவரது ஆண் நண்பர்களில் 5 பேருக்கு அவர் இறந்தால் பலன் இருக்கிறது. அதில் கொலையாளி யார் என்பதை துப்பறியும் நிபுணர் விஜய் ஆண்டனி கண்டுபிடிப்பதே படத்தின் திரைக்கதை. என்கிறார் இயக்குனர் பாலாஜி குமார்.