பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

ரஜினியின் தர்பார், அண்ணாத்த படங்கள் எதிர்பார்த்தபடி ஹிட் அடிக்கவில்லை. அதன் காரணமாக தனது 169வது படத்தை எப்படியாவது சூப்பர் ஹிட் படமாக கொடுத்து விட வேண்டும் என்று நினைக்கிறார் ரஜினி. அதன் காரணமாகவே கோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற வெற்றிப் படங்களைத் தொடர்ந்து விஜய்யின் பீஸ்ட் படத்தை இயக்கி வந்த நெல்சன் இயக்கத்தில் அடுத்து கமிட்டானார் ரஜினி. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்பட்டது.
ஆனால் தற்போது பீஸ்ட் படம் எதிர்பார்த்தபடி வெற்றி பெறாததால் ரஜினி குழப்பத்தில் இருப்பதாக கோலிவுட்டில் ஒரு செய்தி வெளியாக இருக்கிறது. அதோடு ரஜினியின் 169வது படத்தை நெல்சனை வைத்தே இயக்கலாமா? இல்லை இயக்குனரை மாற்றிக் கொள்ளலாமா? என்று தயாரிப்பு நிறுவனம் ரஜினியிடம் ஒரு கோரிக்கை வைத்தது போன்றும் ஒரு தகவல் சோசியல் மீடியாவில் பரவிக் கொண்டு வருகிறது.
ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை. ரஜினியின் 169 ஆவது படத்தை நெல்சன் இயக்குவது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டது. அதனால் இதுபோன்ற செய்திகளை பீஸ்ட் படத்தைப்பார்த்து அதிருப்தி அடைந்த ரஜினி ரசிகர்களே வெளியிடுவதற்கும் வாய்ப்பு உள்ளது.