23 ஆண்டுகளுக்கு பின் நாளை மறுநாள் ரீ-ரிலீஸ் ஆகிறது சுந்தரா டிராவல்ஸ் | ஆகஸ்ட் 8ல் 13 படங்கள் வெளியீடா ??? | வரவேற்பைப் பெறாத 'பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீமேக் | கணவர் கிரிஷ் உடன் பிரிவா... : நடிகை சங்கீதா மறுப்பு | தீபாவளி மாதத்தில் வெளியாகும் அனிமேஷன் படம் | பிளாஷ்பேக்: கமர்ஷியல் ஆக்ஷன் படம் இயக்கிய விசு | முகபருவிற்கு உமிழ்நீர் மருந்து என்கிறார் தமன்னா | 90வது பிறந்த நாளை கொண்டாடிய எம்.என்.ராஜம் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்திற்கு பாதுகாப்பு கேட்டு மனு | பிளாஷ்பேக் : இயக்குனராக, தயாரிப்பாளராக தோற்ற டி.ஆர்.மகாலிங்கம் |
'நான் ஈ' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களாலும் அறியப்பட்டவர் தெலுங்கு ஹீரோ நானி. வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடிப்பதை வழக்கமாக வைத்திருக்கும் ஒரு இளம் ஹீரோ. அவர் நடித்து சமீபத்தில் வெளிவந்த 'ஷியாம் சிங்க ராய்' படம் வெற்றி மட்டும் பெறாமல் நல்ல வரவேற்பையும் பெற்றது.
நானி தற்போது நடித்துள்ள 'அன்டே சுந்தரினிக்கி' தெலுங்குப் படம் தமிழில் 'அடடே சுந்தரம்' என்ற பெயரிலும், மலையாளத்தில் 'ஆஹா சுந்தரா' என்ற பெயரிலும் வெளியாக உள்ளது. 'நேரம், ராஜா ராணி,' படங்களில் கதாநாயகியாக நடித்த நஸ்ரியா இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.
தென்னிந்தியாவிலிருந்து வெளிவரும் முக்கிய ஹீரோக்களின் படங்கள் பான்--இந்தியா படங்களாக வெளிவந்து கொண்டிருக்கும் இந்த சூழலில் 'பான்--இந்தியா' படம் பற்றி புதிய விளக்கம் ஒன்றைக் கொடுத்துள்ளார் நானி.
“ஒரு தெலுங்குப் படத்தை பல மொழிகளில் டப்பிங் செய்து மற்ற மாநிலங்களிலும் வெளியிடுவதை பான்--இந்தியா என்று சொல்வதிலும், என்னை பான்--இந்தியா ஹீரோ என்று சொல்வதிலும் எனக்கு நம்பிக்கை இல்லை. இந்தியாவின் மற்ற மூலைகளிலிருந்தும் மக்கள் அந்தப் படங்களைப் பார்க்கும் வகையில் உருவாக்க வேண்டும். குறைந்த பட்சம் ஓடிடி தளங்களிலாவது அவர்களைப் பார்க்க வைக்க வேண்டும். ஒரு படத்தை இந்தியாவின் சாத்தியமான எல்லா மொழிகளிலும் வெளியிடுவதை விட அந்தப் படத்தின் கருத்தாக்கம் பேசப்படும் விதத்தில் படத்தை உருவாக்க வேண்டும் என விரும்புகிறேன்,” என்று தெரிவித்துள்ளார்.
மலையாள நடிகரான துல்கர் சல்மான் கூட “பான்--இந்தியா என்கிற வார்த்தை எரிச்சலூட்டுகிறது,” என்று சமீபத்தில் சொல்லியிருந்தார் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.